இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வந்து, பண பெட்டியல் வையுங்கள். கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்வது கடன் தொல்லையை தீர்க்கும் என்பது. அந்த வகையில் இன்று இந்த நாளை மறந்தவர்களுக்கு நினைவு கூறவும், அதே சமயம் இந்த நாளில் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான கடன் தீர்க்கும் பரிகாரத்தை பற்றியும் தான், இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். நிறைய பேருக்கு பைரவர் வழிபாடு தெரிந்திருந்தாலும், இந்த புதிய தகவல்கள் உங்களுடைய வழிபாட்டை மேலும் சிறப்பாக மாற்றும்.

இன்றைய தினம் மாலை நேரத்தில் எல்லா பழமையான சிவன் கோவில்களிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, சிறப்பு பூஜை நடக்கும். அதில் சென்று நீங்கள் கலந்து கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு மேல் மிளகு தீபம் பைரவர் கோவிலின் வாசலிலேயே விற்கும். அதை வாங்கி அப்படியே கோவிலில் பைரவரின் முன்பு வைத்து ஏற்றி விடுங்கள். அப்படி இல்லை என்றால் மிளகு தீபம் ஏற்றுவதற்கு என்று கோவில் தனி இடம் இருக்கும் அந்த இடத்தில் பைரவரை நோக்கியவாறு இந்த விளக்கை வைத்து, தீபம் ஏற்றி கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பைரவருக்கு செவ்வரளிப்பு விசேஷம். அது கிடைக்கவில்லை என்றால் சிவப்பு செம்பருத்தி பூவை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். கூடவே ஒரு கருப்பு புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழத்தை உங்கள் கையாலேயே தேர்ந்தெடுத்து, கடையிலிருந்து வாங்கி அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு கொண்டு சென்று, அங்கு இருக்கும் குருக்கள் கையில் கொடுத்து அதை பைரவரின் பாதங்களில் வைத்து தரும்படி சொல்லுங்கள்.

பைரவரின் பாதங்களில் வைத்து, பூஜை செய்த அந்த எலுமிச்சம் பழத்தை, உங்களுடைய கையில் வாங்கி அப்படியே கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் பீரோவில் வைத்து விடுங்கள். பேப்பரில் மடித்து வைக்காதீர்கள். அந்த பழத்தை அப்படியே பீரோவில் படும்படி வையுங்கள். உங்களுடைய கடன் முழுமையாக தீர வேண்டும். பண பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் பைரவா என்று சொல்லிக் கொண்டு முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த பழம் வாடிவிடும். வாடிய பின்பு அந்த பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு பக்கத்தில் போட்டு விடலாம். பிறகு கடனை திருப்பிக் கொடுப்பதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அந்த கடனை படிப்படியாக இந்த ஒரு சின்ன பரிகாரம் குறைக்கும் என்பது நம்பிக்கை.

இதே போல உங்களால் முடிந்த உணவுப்பொருட்களை நாய்களுக்கு வாங்கி கொடுக்கலாம். இன்றைக்கு பரிகாரத்திற்காக கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவு பொருளை நாய்க்கு கொடுப்பது அவ்வளவு சிறப்பு. முடிந்தால் உங்கள் கையாலேயே இரண்டு சப்பாத்தி செய்து கொண்டு போய் நாய்களுக்கு கொடுக்கலாம். முடியாதவர்கள் கோதுமை மாவில் விற்கப்படும் பிஸ்கட்டைகளை வாங்கி கூட கொடுங்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இருப்பினும் உங்கள் வீட்டில் உங்கள் கையால் செய்த கோதுமை பலகாரத்தை நாய்க்கு கொடுப்பது இரட்டிப்பு பலன் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயங்களை நீங்கள் சரியாக செய்தாலே போதும், தங்கம் சேரும் வாய்ப்பு பெருகி, தங்கம் உங்களிடம் நிரந்தரமாக தங்கி விடும்.

இன்றைக்கு என்று மட்டுமல்ல. உங்களால் முடியும்போதெல்லாம் வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். அது காலத்திற்கும் உங்களுக்கு புண்ணிய கணக்கை சேர்த்துக் கொண்டே இருக்கும். மேலே சொன்ன விஷயங்களில், நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -