முடிவிலா கடனுக்கும் ஒரு முடிவை தேடித்தரும் முந்திரிப் பருப்பு. கால பைரவருக்கு இந்த பரிகாரத்தை செய்தால் காலத்துக்கும் கடன் சுமை கிடையாது.

kala-bairavar-vilakku
- Advertisement -

கால பைரவரை நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு காலத்திற்கும் கடன் இல்லாத வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும். காலத்தால் வரக்கூடிய கெடுதலை தடை செய்து, நல்லதை மட்டும் நமக்கு கொடுக்கக்கூடிய சக்தி இந்த கால பைரவருக்கு உண்டு. காலம் கொடுக்கக்கூடிய கஷ்டத்திலிருந்து யாராலும் நம்மை காப்பாற்ற முடியாது. இந்த கால பைரவரால் மட்டுமே காலத்தால் வரக்கூடிய பிரச்சினைகளை தடுத்து நிறுத்த முடியும். கெட்ட காலத்தால் நமக்கு ஏற்பட்ட தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட சுலபமான பரிகாரம் ஒன்றைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கண்ணை மூடிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் கடன் பிரச்சனை உங்களுக்கு இல்லை. அவ்வளவு தான்.

ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் பழமையான சிவன் கோவில் இருந்தால் அங்கு இருக்கக்கூடிய காலபைரவர் சன்னிதியில் இந்த பரிகாரம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலும் மற்ற கோவில்களில் கால பைரவரின் சன்னிதானம் இருக்காது. ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி 27 மிளகு, சிவப்பு துணியில் முடிச்சாக கட்டி விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு கால பைரவருக்கு 27 முந்திரி பருப்புகளை நிவேதனமாக வைத்து, ஒரு சிறிய புனுகு டப்பாவை கால பைரவரின் பாதங்களில் வைத்துவிட்டு, உங்களுடைய பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சனை செய்து முடித்த பின்பு முந்திரிப் பருப்பை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடலாம். நீங்களும் அதை சாப்பிடலாம். புனுகுகோவிலிலேயே வைத்து விடுங்கள்.

சிறிது நேரம் கால பைரவரின் சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து தியான நிலையில் மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக நீண்ட நாட்களாக உங்களுக்கு தலைவலியை கொடுத்து வரும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர்ந்து இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவருக்கு நிச்சயமாக கடன் தொல்லையிலிருந்து விடுபட வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

சில பேருக்கு கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். சிலருக்கு வீட்டின் அருகில் பைரவர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருக்காது. சில வீடுகளில் கால பைரவரின் திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். இருக்கட்டும்.

காலபைரவரை நினைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் ஒரு தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். ‘ஸ்ரீ கால பைரவரே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் காலபைரவர் வந்து அந்த தீபச்சுடரில் அமர்ந்து விடுவார். பின்பு அந்த தீபத்திற்கு பக்கத்தில் முந்திரி பருப்புகளை வைத்து நிவேதனமாக கால பைரவருக்கு பூஜை செய்து, இறுதியாக கற்பூரம் ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொண்டு, வீட்டிலேயே வேண்டுதலை வைத்தாலும் உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும்.

உங்களுக்கு எந்த வழிபாடு சௌகரியமாக இருக்கின்றதோ அந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குறைந்தது 9 வாரங்கள் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யும்போது கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க ஆரம்பித்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் காலபைரவரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றிக் கொண்டால் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -