கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்

cash
- Advertisement -

என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம் உங்களை விட்டுப் போகும். ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரம். கல் உப்பு பரிகாரம். கல்லுப்புக்கு எப்போதுமே ஒரு மகிமை இருக்கிறது.

கல்லுப்பை நாம் கையில் எடுத்து எதை நினைக்கிறோமோ, அதை அந்த கல்லுப்பு தன்னுள்ளே கிரகித்துக் கொள்ளும். அதாவது கல் உப்பு நீங்கள் சொல்லும் வார்த்தையை வாங்கிக் கொள்ளும். நீங்கள் கல்லுப்பிடம் சொன்ன விஷயத்தை அந்த கல்லுப்பானது உடனடியாக நிறைவேற்றி வைக்கும். அப்படி ஒரு சக்தி கல்லுப்புக்கு உண்டு. அப்பேர்பட்ட கல்லுப்பை வைத்து தான் இன்று ஒரு எளிமையான கடன் தீர்க்கும் பரிகாரத்தை பார்க்க போகின்றோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து விடுங்கள். எப்படி குளிக்கணும் என்றால், சிறிதளவு கல் உப்பை எடுத்து உங்களுடைய தலைக்குப் பின்னால் இருக்கும் கழுத்துப் பகுதியில், அந்த கல் உப்பை வைத்து விடுங்கள். தலையில் தண்ணீரை ஊற்றினால் கழுத்துப் பகுதியில் பின்பக்கம் இருக்கும் அந்த கல்லுப்பு அப்படியே கரைந்து கீழே வந்து விடும்.

கடன் கரைந்து போக வேண்டும் என்று தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றுங்கள். அந்த கல் உப்பு அப்படியே கரைந்து கீழே போய்விடும். இப்படி குளித்துவிட்டு சுத்தபத்தமாக ரெடி ஆயிருங்க. பிறகு ஒரு சின்ன பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எட்டு கல் உப்பை எடுக்க வேண்டும். சின்ன சின்ன கட்டிகளாக கல் உப்பில் இருக்கும் அல்லவா.

- Advertisement -

அதிலிருந்து 8 கல் உப்பு எடுத்து இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கல்லுப்பாக வலது கையில் எடுத்து அந்த தண்ணீரில் போடணும். கடன் போகணும், கடன் போகணும், கடன் என்னை விட்டு கரைந்து போகணும், என்று சொல்லிக் கொண்டே அந்த கல்லுப்பை தண்ணீரில் போட்டு உப்பு தண்ணீரில் கரைந்த உடன், அந்த தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை கவனமாக நம்பிக்கையோடு செய்து வந்தால் உங்கள் கடன் நிச்சயம் கரையும். எளிமையான பரிகாரம்தான். ஆனால் இது அற்புதம் வாய்ந்த பரிகாரம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்

நிறைய கடன் உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். கல் உப்பை பரிகாரத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பெரிய செலவு ஆகப்போவது கிடையாது. ஆனால் பல லட்ச ரூபாய் கடனை கூட இந்த பரிகாரம்  சரி செய்யும் என்ற நம்பிக்கையுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -