கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

karumanjal
- Advertisement -

இன்று மனிதர்களிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கை நீட்டி கடன் வாங்கும் போது நாம் கொஞ்சம் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம். இந்த அளவுக்கு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று. அந்த அளவுக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடியது கடன். நல்ல மனிதர்களை நம்மிடத்தில் இருந்து பிரித்து விடும்.

நல்ல நண்பர்களை நல்ல உறவுகளை நம்மிடத்தில் இருந்து பிரித்து விடும். வாழ்க்கையில் வாழக்கூடிய நல்ல சூழ்நிலையை நம்மிடத்திலிருந்து பிரிக்கக்கூடிய சக்தி கொண்டது தான் கடன். நம்முடைய சந்தோஷம் நிம்மதி தூக்கம் இது எல்லாம் காணாமல் போக காரணமாக இருப்பது கடன். 1 லட்ச ரூபாய் கடன் தானே, வாங்கினால் என்ன என்று, ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் நாம் செய்த காரியம் நம்மை கொண்டு போய் எங்கேயோ நிறுத்தி இருக்கும்.

- Advertisement -

கடனாக வாங்கிய அந்த ஒரு லட்ச ரூபாய்க்கு, வட்டி மட்டுமே ஒரு லட்ச ரூபாய் கட்டி இருப்போம். கணக்கு போட்டு பாருங்கள். வாழ்க்கையில் எப்படி சந்தோஷம் இருக்கும். இப்படி நீங்கள் வாங்கிய கடனால் உங்கள் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் முற்றிலும் தொலைந்து போய்விட்டதா. உங்களுக்கான வழிபாடு தான் இது.

கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

பொதுவாகவே இந்த பிரபஞ்சத்தில் இயற்கையாக விளையக்கூடிய பொருட்களுக்கு ஒவ்வொரு சக்தி உண்டு. அப்படித்தான் இந்த கருமஞ்சளும். கருமஞ்சளுக்கு இயற்கையாகவே நாம் நினைத்ததை நிறைவேற்றி தரக்கூடிய சக்தி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் கிடைக்கும் கருமஞ்சள் ஒரு துண்டு அல்லது இரண்டு துண்டோ வாங்கிக் கொள்ளுங்கள். இது கொஞ்சம் விலை கூடுதலாக தான் இருக்கும்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பூஜை அறையில் இந்த கருமஞ்சளை போட்டு வச்சிருங்க. தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, ஒரு கருமஞ்சளை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தினமும் தியானம் செய்ய வேண்டும். உங்களுடைய மனசுக்குள், புத்திக்குள் எல்லாமே கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

வேண்டுதல் வைக்கும் போது இந்த கருமஞ்சள் உங்கள் உள்ளங்கைகளில் இருந்தால் நீங்கள் வைக்கும் வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். அதாவது உங்கள் கடனை திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும். அதற்குண்டான வழியை உங்கள் கையில் இருக்கும் கருமஞ்சள் காட்டிக் கொடுக்கும். ஏதோ ஒரு கெட்ட நேரம், ஏதோ ஒரு கெட்ட சக்தி நீங்க வாங்கிய கடனை திருப்பி கொடுக்க விடாமல் உங்களை தடுக்கும் அந்த தடையை உடைக்கும் சக்தி இந்த கருமஞ்சளுக்கு உண்டு.

- Advertisement -

உங்க இஷ்ட தெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பட்சத்தில், உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து நிச்சயமாக வெளிவர முடியும். தொடர்ந்து 48 நாள் இதை செய்யணும். காலை 6:00 மணிக்கு முன்பு இந்த வேண்டுதலை வைப்பது இன்னும் சிறப்பான பலனைத் தரும். அதாவது பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள் அல்லவா சூரிய உதயத்திற்கு முன்பு இருக்கும் அதிகாலை வேளையில் இந்த பிரார்த்தனையை நீங்கள் வைக்கும் போது உங்கள் கடன் சுமை இன்னும் வெகு சீக்கிரமாக குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிக்கலாமே: சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்ததில் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்தால், வேண்டுதல் வைத்த கருமஞ்சளை அப்படியே கொண்டு போய் பீரோவில் வச்சிருங்க. மீண்டும் மீண்டும் கடன் உங்களை வந்து தொல்லை கொடுக்காமல் இருக்கும். 48 நாட்களில் உங்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை எனும் பட்சத்தில் அந்த கருமஞ்சளை செடி கொடிகளுக்கு கீழே கொண்டு போய் போட்டுடுங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -