இந்த 1 பொருளை தலையைச் சுற்றி போட்டால் கழுத்தை நெரிக்கும் கடனும் காணாமல் போகும். வராத பணம் வீடு தேடி வரும்.

cash
- Advertisement -

கழுதை நெரிக்கும் கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் இருக்காது. நிம்மதியான சாப்பாடு இருக்காது. சந்தோஷமான தருணத்தில் வாய்விட்டு கூட சிரிக்க கூட முடியாது. மொத்தத்தில் வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியே கெட்டுப் போகும். கடன் என்ற மூன்றே மூன்று எழுத்துக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு. கடனை வாங்கி வட்டி கட்ட முடியாமல், சொத்தை விற்று நகை நட்டுகளை விற்று, வட்டி கட்டி வாழ்க்கையில் நொந்து போனவர்களுக்கு மட்டும்தான் இந்த கடன் சுமை என்ன என்பது புரியும். நீங்கள் கடன் இல்லாமல் வாழ்பவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சொர்க்கத்தில் வாழ்வதற்கு சமம்.

தீராத கடன் சுமையில் இருப்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம். மிக மிக எளிமையான பரிகாரம் இது. ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த எளிய பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை மேல் பலனை கொடுக்கும். நம்பிக்கையாக பரிகாரத்தை செய்ய வேண்டும். கடனை அடைக்கும் அந்த பரிகாரம் என்ன. கடன் தீர நம் தலையை சுற்றி போட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்பதை பற்றிய விரிவான பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர்க்கும் கிராம்பு பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்ய நமக்கு 2 பொருட்கள் தேவை. கடுகு எண்ணெய், கிராம்பு, இரண்டையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கடுகு எண்ணெய் கொஞ்சம் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு கடுகு எண்ணெய் எடுத்தால் கூட போதும். இரண்டு கிராம்பு மூழ்கும் அளவிற்கு கடுகு எண்ணெய் தேவைப்படும்.

முந்தைய நாள் இரவு, கடுகு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் உங்கள் முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பை உள்ளங்கையில் வைத்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையை குலதெய்வத்திடம் சொல்லி, அந்த கடன் பிரச்சனையெல்லாம் முழுமையாக தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் கிராம்பை அந்த கடுகு எண்ணெயில், இரவே போட்டு அலமாரியில் எங்கேயாவது வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து கடுகு எண்ணெக்கு உள்ளே இருக்கும் கிராம்பை மட்டும் எடுத்து, உங்கள் உள்ளங்கையில் வைத்து தலையை வலப்புறமாக மூன்று முறை சுற்றி செடி கொடிகளுக்கு கீழே கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இதே போல தொடர்ந்து 48 நாள், இரண்டு கிராம்புகளை, கடுகு எண்ணெயில் ஊற வைத்து தலையை சுற்றி போட்டு வர உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் தங்க நகைகளை அணிவதற்கு முன்பாக இதெல்லாம் தவறாமல் செய்தாலே, தங்கம் வாங்கும் யோகம் தானாகவே உங்களை தேடி வரும் என்பது உறுதி.

கிண்ணத்தில் இருக்கும் பழைய எண்ணெயை அடுத்த நாள் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெய் குறைவதாக தென்பட்டால் அந்த கிண்ணத்தில் இன்னும் கொஞ்சம் கடுகு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரம் எவ்வளவு பெரிய கடன் சுமையையும் படிப்படியாக குறைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் 48 நாட்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -