கோடிக்கணக்கான கடன் இருந்தாலும் அவற்றை விரைவாக அடைத்துவிட உதவும் மே மாத மைத்ரேய முகுர்த்த ரகசியம்

kadan
- Advertisement -

பொதுவாகவே மனிதன் தனது வாழ்க்கையை தான் நினைத்தபடியெல்லாம் இன்பமாக வாழ்வதற்கு அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு சிலர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைப்பதற்காக கடன் வாங்குகிறார்கள். ஒருசிலர் அன்றாடம் பொழுதை கழிப்பதற்கு முடியாமல் கடன் வாங்குகின்றனர். இவ்வாறு தங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு வித தொகையை கடனாக வைத்துள்ளனர். இவ்வாறு வாங்கிய கடனை விரைவாக அடைத்து விட முடியாமல் அதற்கு வட்டி கட்டி பெரும் துன்பத்தில் மாட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். தொடர்ந்து பணம் கொடுத்து கொண்டே இருந்தாலும் அந்த கடன் மட்டும் அடைவதில்லை என்ற பெரும் துயரம் பலருக்கும் இருக்கிறது. இவ்வாறான கடன் பிரச்சனையிலிருந்து விடுபட, விரைவாக கடனைத் தீர்த்து விட இந்த மே மாத மைத்ரேய முகூர்த்தம் பெரிதும் துணைபுரிகிறது. வாருங்கள் இந்த மைத்ரேய முகுர்த்த ரகசியத்தைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமையோடு அஸ்வினி நட்சத்திரம் சேர்ந்து வந்தால் அது மைத்ரேய முகூர்த்தம் எனப்படுகிறது. அன்றைய தினம் மேஷ லக்னம் இணைகின்ற நேரம் மைத்ரேய முகூர்த்தம் ஆகும். அது போல செவ்வாய் கிழமையில் அனுஷ நட்சத்திரம், விருச்சிக லக்கனம் சேருகின்ற நாளும் மைத்ரேய முகூர்த்தம் எனப்படுகிறது.

- Advertisement -

மே மாதம் சனிக்கிழமை அன்று மேஷ லக்னமும், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வருவதால் அன்றைய தினமும் மைத்ரேய முகூர்த்தம் எனப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் இவ்வாறான ஒரு சிறு பரிகாரத்தை செய்து உங்கள் கடனை அடைப்பதற்காக முதல் படியை தொடங்குவது, விரைவாக உங்கள் கடன் முழுவதையும் அடைப்பதற்கு வழி செய்கிறது.

பொதுவாகவே வாழ்க்கையில் இருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபட முடியும், என்று அன்றே நமது ஆன்மீக சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு இந்த மைத்ரேய முகூர்த்தம் என்பது கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அவற்றை விரைவாக அடைப்பதற்கு ஏற்ற வழியை வகுத்துக் கொடுக்கிறது.

- Advertisement -

மைத்ரேய முகுர்த்த நேரத்தில் ஒரு வெள்ளைக் அவர் அல்லது மெய் கவர் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சமையலுக்குப் பயன்படுத்தும் பிரிஞ்சி இலையை எடுக்க வேண்டும். இந்த இலைக்கு பொதுவாகவே ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே இதை பயன்படுத்தும் பொழுது நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றியாக முடியும். அடுத்ததாக அந்த இலையில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கிய உள்ளீர்களோ அவர்களின் பெயரையும், அவர்களிடம் வாங்கியிருக்கும் தொகையின் மொத்த மதிப்பையும் எழுதிக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனை அந்த கவரில் வைத்து விட வேண்டும். பின்னர் இதனுடன் ஏதேனும் ஒரு சிறு தொகையையும் வைத்துவிடவேண்டும். விரைவாக இந்த நபரின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இதனை சரியாக சனிக்கிழமை காலை 6 இலிருந்து 7 அல்லது மாலை ஏழிலிருந்து எட்டு இந்த நேரத்தில் செய்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் 3 மைத்ரேய முகூர்த்தம் மட்டுமே வரும். ஆனால் இந்த மாதம் நான்கு மைத்ரேய முகூர்த்தம் வருவதால் இது மிகவும் விசேஷமானதாக உள்ளது.

- Advertisement -