கடனை நிவர்த்தி செய்யும் முருகன் வழிபாடு

murugan1
- Advertisement -

முருகனை கும்பிட்டால் கஷ்டம் தீரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நீங்கள் முருகனை எப்படி கும்பிட்டாலும் அவர் உங்களுக்கு வரங்களை வாரி வழங்கி விடுவார். உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு செய்யப்படக்கூடிய வழிபாடு முறைகள் என்றைக்குமே தோல்வி அடையாது. இதுதான் ஆன்மீகத்தின் நிதர்சனமான உண்மை.

பரிகாரத்திற்கு செல்வதற்கு முன்பு நாம் ஒரு சின்ன விஷயத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு மகன் தன்னுடைய அப்பாவை பார்த்து கேட்கின்றான். கடவுளைப் பார்க்க எவ்வளவு பெரியதாக இருப்பார். அவருடைய உருவம் எப்படி இருக்கும் என்று. அப்பா சொன்னாராம். அதோ, வானத்தில் போகுது பாரு விமானம். அந்த அளவில் தான் கடவுள் இருப்பார் என்று.

- Advertisement -

ஒரு நாள் தன் மகனோடு விமான நிலையத்திற்கு சென்று இருக்கிறார் அந்த தந்தை. அந்தப் பையன் அந்த விமானத்தை மிக அருகில் பார்த்துவிட்டு, அப்பாவிடம் கேட்கின்றான். இந்த விமானத்தை தூரமாக பார்க்கும் போது சின்னதாக தெரிந்தது. இப்போது கீழே இருந்து பக்கத்தில் நின்று பார்க்கும்போது விமானம் எவ்வளவு பெருசாக தெரிகிறது.

கடவுள் இவ்வளவு பெரிய உருவத்தை கொண்டவரா என்று. அதற்கு அந்த அப்பா சொன்ன பதில் இதுதான். நாம் கடவுளை விட்டு தூரமாக இருந்தால் கடவுள் நம்முடைய பார்வைக்கு ரொம்பவும் சிறியதாக தெரிவார். நம் கடவுளை எவ்வளவு நெருங்கி நெருங்கி போகின்றோமோ, அந்த அளவுக்கு கடவுள் நமக்கு ரொம்ப ரொம்ப பெரியதாக தெரிவார். இந்த பதிலின் அர்த்தம் நிச்சயம் உங்களுக்கு புரிந்து இருக்கும். இதுதாங்க கடவுள் பக்தியும் புரிதலும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் முருகர் வழிபாடு

சரி, போகட்டும். இப்போது பரிகாரத்திற்கு வருவோம். நீங்கள் கடவுளை நம்புறீங்க. முருகப் பெருமான் உங்களுடைய கஷ்டங்களுக்கு விடிவு காலத்தை கொடுப்பார் என்று நம்புறீங்க. செவ்வாய் கிழமை தோறும் காலை அல்லது மாலை நேரம் உங்களுக்கு எப்போது டைம் கிடைக்குதோ, அப்போ இந்த வழிபாட்டு முறையை செய்யுங்கள்.

ஒரு சின்ன கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி துவரம் பருப்பு போட்டுக் கொள்ளுங்கள். அந்தத் துவரம் பருப்புக்கு மேலே செவ்வரளி பூ மூன்று வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கும் செவ்வரளி பூ வைத்து விடுங்கள். ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகா எனக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் சீக்கிரம் தீர வேண்டும். கடன் பிரச்சனை குறைய வேண்டும்.

- Advertisement -

மேலும் மேலும் நான் கடமை கைநீட்டி யாரிடமிருந்து வாங்க கூடாது. அதற்கு உண்டான வழியை எனக்கு காட்டு என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடன் தவிர வேறு ஏதாவது வீட்டில் பிரச்சனை இருந்தால் அதற்கும் இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு கிடையாது.

செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் 9 செவ்வாய் கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டை முடித்து விடுங்கள் இந்த கிண்ணத்தில் இருக்கும் பருப்பை அடுத்த நாள் கொண்டு போய் காக்கை குருவிகளுக்கு இரையாக வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு இதை தண்ணீரில் ஊற வைத்து கொடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் பரிகாரம். இந்த துவரம் பருப்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. முருகப்பெருமானுக்கு முன்பாக இதை வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வழிபாடு செய்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் பண பிரச்சினை படிப்படியாக குறையும். அதேபோல அந்த அரளிப்பூ ரொம்ப ரொம்ப முக்கியம்.

இதையும் படிக்கலாமே: வளமான வாழ்க்கை அருளும் துர்க்கை அம்மன் வழிபாடு.

பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய அரளி பூவை கட்டாயம் முருகருக்கு வையுங்க. இதை விட இந்த உலகத்தில் சிறந்த பரிகாரம் வேறு எதுவுமே கிடையாது. நம்பி இந்த வழிபாட்டை செய்பவர்கள் நிச்சயம் கைவிடப்பட மாட்டார்கள் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -