கடன் அடைய வெற்றிலை பரிகாரம்

betal leaf cash
- Advertisement -

ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி நம்முடைய வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழவும் ஆசைப்பட்டதன் விளைவு இன்று பெரும்பாலும் அனைவரும் கடனை சுமந்து கொண்டு துன்பப்படுகிறோம்.

கடன் என்றால் இது போன்ற சூழ்நிலைக்காக வாங்கினால் அது தேவையில்லாதது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சில நேரங்களில் வேறு வழியில்லாமல் மருத்துவ செலவிற்கு வேறு சில அத்தியாவசிய செலவிற்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரத் தான் செய்கிறது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி கடனால் அவதிப்படுவது கூட நம்முடைய கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

- Advertisement -

எதுவாக இருப்பினும் கடன் வாங்கி விட்டால் அது சுமை தான். அந்த கடனை அடைப்பதற்கு முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டையுமே செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கடன் தீர்ந்து பணவரவு அதிகரிக்க

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அதே போல் வெள்ளிக்கிழமை காலையில் உணவு அருந்துவதற்கு முன்பாக செய்து விட வேண்டும். அதுவும் ஆறிலிருந்து ஏழு சுக்கிர ஹோரையில் செய்யும் பொழுது அதிக பலனை தரும். இதை சாப்பிட்ட பிறகும் செய்யக் கூடாது இது மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கான விதிமுறைகள். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்களுடைய அன்றைய பூஜை வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரே ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையை வியாழன் அன்றே எடுத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று செடியில் இருந்து வெற்றிலையை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த வெற்றிலையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதை மடித்து பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.

இதே போல் வாரவாரம் வெள்ளிக்கிழமை அன்று பழைய வெற்றிலை எடுத்து விட்டு புதிய வெற்றிலை மட்டும் மாற்றி வைத்து விடுங்கள். அதுவும் காலை வேளையில் சாப்பிடுவதற்கு முன்பாக செய்ய வேண்டும். இது போல தொடர்ந்து செய்து வரும் பொழுது நம்முடைய பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பண பிரச்சனை தீரும் என்றாலே பணவரவு அதிகரிக்கும். இதனால் கடன் தொல்லை அறவே நீங்கி விடும். வெற்றிலையில் மகாலட்சுமி தாயார், பிரம்மா, விஷ்ணு போன்ற அனைவரும் வாசம் செய்வதாக ஐதீகம். ஐந்து நாணயமானது குபேரருக்கு உடையது. வெள்ளிக்கிழமை காலையில் சுக்கிர ஹோரையில் செய்வது சுக்கிர வசியமும் ஏற்படும். இவை அனைத்தையும் ஒன்று சேர செய்யப்படும் இந்த பரிகாரமானது பணவரவை அதிகரித்து வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனையை சுலபமாக தீர்க்க வழிகாட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் குவிய ஐப்பசி மாத வழிபாடு

இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து தாராளமான பண வரவை பெற்று கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -