அம்மன் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக கொடுத்தால் கடன் சுமை எல்லாம் படிப்படியாக குறையும்.

amman7
- Advertisement -

கஷ்டம் வரும்போது தான் மனிதர்கள் இறைவனை நினைக்கிறார்கள். சந்தோஷப்படும்போது கடவுளை நினைப்பதே கிடையாது. சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எந்த சூழ்நிலையிலும் இறை வழிபாடு செய்வதை நிறுத்தக்கூடாது. நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ உங்களுடைய சௌகரியத்திற்கு ஏற்ப கோவிலுக்கு செல்வதற்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். நிச்சயமாக எந்த கஷ்டமும் எந்த துன்பமும் உங்களை வந்து தொல்லை கொடுக்காது.‌ இது நிதர்சனமான உண்மை. ஆன்மீகத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இது புரியும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம் இது. ஆனால் அதிகமாக கடன் சுமை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதிகமாக கடன் சுமை உள்ளவர்கள் 11 வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய கடன் சுமை குறைய ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

கடன் சுமை குறைய அம்மன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்:
குரு அம்சம் கொண்ட மஞ்சள், அதாவது விரலி மஞ்சள். இதை பணம் கொடுத்து வியாழக்கிழமை அன்று நீங்கள் வாங்க வேண்டும். வாங்கிய மஞ்சளை கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் படத்தின் முன்போ அல்லது காமாட்சி அம்மன் விளக்குக்கு பக்கத்திலோ அல்லது வேறு ஏதாவது அம்மன் பாதங்களிலோ வைத்து விடுங்கள். விலக்கு ஏற்றி வைத்துவிட்டு மனதார இறைவனை வேண்டி, கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குருவின் அம்சம் பரிபூரணமாக கிடைக்கும்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. வாங்கி வைத்த இந்த மஞ்சளை கொண்டு போய் கோவிலின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். அம்மனின் ஆசிர்வாதமும் கிடைக்கும். அங்கு இருக்கும் அர்ச்சகரிடம் இந்த மஞ்சளை கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். அந்த கோவில் பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்திக் கொள்வார்கள். 11 வெள்ளிக்கிழமை இப்படி மஞ்சளை, கடன் கரைய வேண்டும் என்று வேண்டி அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுத்து வர உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும்.

- Advertisement -

இந்த பணம் வந்தால் கடனை திருப்பி கொடுத்து விடலாம். இந்த சொத்து விற்றால் கடனை திருப்பிக் கொடுத்து விடலாம். இந்த கேஸ் ஜெயித்தால் கடனை திருப்பிக் கொடுத்து விடலாம். இந்த வேலை கிடைத்துவிட்டால் கூட கடனை திருப்பி கொடுத்து விடலாம் என்று நிறைய வேண்டுதல்கள் மனிதர்களுடைய மனதில் இருக்கும். ஆனால் அந்த முக்கியமான ஒரு காரியத்தை நடத்த விடாமல் கெட்ட நேரம் நம்மளை வந்து தடுக்கும். அந்த கெட்ட நேரத்தை சரி செய்வதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இவர்களுக்கு பாத பூஜை செய்தால் சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் யோகம் தேடி ஓடிவரும்.

சில பேருக்கு கொடுத்த கடன் வசூல் ஆகாமல் இருக்கும். 5 லட்சம் 10 லட்சம் என்று வட்டிக்கு கூட விட்டு வைத்திருப்பார்கள். அவர்கள் அந்த கடனை திருப்பிக் கொடுத்தால் தான் என்னுடைய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்ய முடியும் அல்லது என் பிள்ளை மேல்படிப்புக்கு அந்த பணம் தேவை என்ற சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்ல பலன் உண்டு. விரலி மஞ்சள். உங்களால் எத்தனை மஞ்சள் முடியுமோ அத்தனை மஞ்சள் வாங்கி கொடுக்கலாம். மூன்று ஐந்து ஏழு பதினொன்று என்ற கணக்கில் ஒற்றைப்படையில் வாங்கி கொடுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -