இவர்களுக்கு பாத பூஜை செய்தால் சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் யோகம் தேடி ஓடிவரும்.

veedu
- Advertisement -

சொந்த வீடு வாங்கும் யோகம் சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு இருக்காது. சில பேருடைய ஜாதக கட்டத்திலேயே சொந்த வீடு வாங்கக்கூடிய குடுப்பினை இல்லாமல் இருக்கும். சில பேருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் ஜாதகத்தில் இருந்தும், நேரமும் காலமும் அவர்களை சொந்த வீடு வாங்க விடாமல் தடுக்கும். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கிரக தோஷம். சரி இருக்கட்டும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து சொந்த வீடு வாங்குவதற்கான யோகத்தை சீக்கிரமே பெற வேண்டும் என்றால் என்ன செய்வது. இதோ ஒரு ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம் உங்களுக்காக.

சொந்த வீடு கட்ட பாத பூஜை பரிகாரம்:
சொந்த வீடு கட்டவும், சொந்த வீடு வாங்கவும், யோகம் வர வேண்டும் என்றால் உங்களுடைய தாய் தந்தையருக்கு நீங்கள் பாத பூஜை செய்ய வேண்டும். தாய் பிறந்த நட்சத்திர நாளில் இந்த பாத பூஜையை, தாய் தந்தையர் இருவரையும் சேர்த்து வைத்து செய்ய வேண்டும். இரண்டு நாற்காலிகள் போட்டு அதில் உங்கள் அம்மா அப்பா இருவரையும் அமர வையுங்கள்.

- Advertisement -

அவர்களுடைய பாதங்களை எடுத்து தாம்பள தட்டில் வைத்து முதலில் நல்ல சுத்தமான தண்ணீரால் கழுவி, அதன் பின்பும் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து, பூக்களால் அர்ச்சனை செய்து பாத பூஜை செய்து வணங்கிக் கொள்ளுங்கள். அந்த தீர்த்தத்தை எடுத்து உங்கள் தலையில் தெளித்துக் கொண்டு பாத பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

கொஞ்சமாக பச்சரிசி அட்சதையை முன் கூட்டியே தயார் செய்து வைத்து விடுங்கள். பாத பூஜை முடிந்தவுடன் தாய் தந்தையர் காலில் விழுந்து அந்த அட்சதையை அவர்கள் கையால் போட சொல்லி ஆசீர்வாதமும் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் மனநிறைவோடு நீங்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று வாழ்த்தினால், நிச்சயமாக நீங்கள் சொந்த வீடு பெரும் யோகம் கிடைத்துவிடும். ஆண் பிள்ளைகளும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண் பிள்ளைகளும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

எனக்கு அம்மா இருக்காங்க, ஆனா அப்பா இல்லை என்று சில பேர் இருப்பார்கள். சில பேருக்கு அம்மா இல்லை அப்பா இருப்பாங்க இப்படி இருந்தால் என்ன செய்வது. உங்களுக்கு யார் இல்லையோ அவர்களுக்கு பதிலாக ஒரு செங்கல்லை அந்த இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு யார் இல்லையோ, அந்த செங்கல்லை உங்கள் தாய் தந்தையராக பாவித்து இந்த பூஜையை செய்யலாம் தவறில்லை.

சில பேருக்கு தாய் தந்தை இரண்டு பேருமே இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு தாய் தந்தை ஸ்தானத்தில் வேறு யாராவது இருப்பார்கள் அல்லவா. நீங்கள் அவர்களை தாய் தந்தையாக பார்ப்பீர்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த பாத பூஜையை செய்தாலும் நிச்சயம் நன்மை நடக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு ஒரே ஒருமுறை செய்து பாருங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் சரி அதையெல்லாம் தாண்டி சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் நிச்சயம் உங்களுக்கு வரும். ஆனால் வீடு வாங்க, நிலம் வாங்க தேவையான முயற்சிகளை முழுமூச்சோடு நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். தானாக எதுவும் நடக்காது.

இதையும் படிக்கலாமே: கொடிய ஜென்ம தோஷத்தையும், தீராத பண தோஷத்தையும் தீர்க்க கோமாதாவிற்கு உங்கள் கையால் இதை தந்தால் போதும். தோஷங்கள் நீங்கி மகாலட்சுமியின் அருளாசியுடன் வீட்டில் செல்வ கடாக்ஷம் நிறைய ஆரம்பிக்கும்.

ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக சூழ்நிலையை சரி செய்வதற்காகத்தான் பரிகாரம். நல்ல காரியம் நடக்கும் போது வரக்கூடிய தடைகள் எல்லாம் குறையும். ஆனால் முயற்சிகளே எதுவும் செய்யாமல் வெறும் பரிகாரத்தை செய்துவிட்டு தானாக வீடு வரும் என்றால் நிச்சயம் முடியாது. உங்களுடைய முயற்சிகளோடு சேரும்போது பரிகாரம் இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -