கண்ணா பின்னான்னு கண்ணை மூடிக்கிட்டு கைநீட்டி வாங்கி இருக்கும் கடனுக்கு, ஒரு சமாதி கட்ட சரியான பரிகாரம் இதுதான்.

- Advertisement -

அப்போதெல்லாம் கஷ்டம் என்று வந்தால், கை தூக்கி விட 10 பேர் இருப்பார்கள். இப்போது எல்லாம் அப்படி கிடையாது. கஷ்டத்தில் தள்ளிவிட தான் 10 பேர் இருக்கிறார்கள். கஷ்டப்படுபவர்களை பார்த்து கைநீட்டி பேசவும் 10 பேர் இருக்கிறார்கள். கஷ்டத்திற்கு கை தூக்கி விட, கால் காசு பணம் மட்டும் தான் நமக்கு உதவியாக நிற்கின்றது. எல்லோரையும் குறை சொல்வதாக நினைத்து கொள்ள வேண்டாம். இன்றைய சூழ்நிலை இதுதான். எப்படியோ யாரை நம்பியாவது எங்கேயாவது பணத்தை கொடுத்து ஏமாறுவது, அல்லது பணத்தை கடன் வாங்கி தொழிலில் போட்டு நஷ்டம் அடைவது, இப்படி எதையாவது செய்து பண சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்த கடனில் இருந்து மீள முடியாமல் சிக்கித் தவிப்போம். எப்படியோ கடனை வாங்கிட்டீங்க. அதிலிருந்து வெளிவர என்ன செய்வது. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு கூட உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கலாம். கடன் சுமையை தீர்க்கும் விளக்கு பரிகாரம் ஒன்றை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கற்பூராதி தைல விளக்கு:
முதலில் ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள்‌. அதில் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த தொகையை பெயருடன் எழுதுங்கள். எத்தனை பேரிடம் கைநீட்டி கடன் வாங்கி இருந்தாலும் பரவாயில்லை ஒரு பட்டியல் போடுங்கள். அந்த பேப்பர் அப்படியே இருக்கட்டும். விளக்கு ஏற்றுவதற்கு ஒரு புதிய மண் அகல் விளக்கு, நல்லெண்ணெய், கற்பூராதி தைலம், தாமரை தண்டு திரி, இந்த பொருட்கள் எல்லாம் தேவை. (ஒரு முறை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திய புது மண் அகல் விளக்கை மீண்டும் மீண்டும் அடுத்த நாள் விளக்கேற்ற பயன்படுத்தலாம்).

பூஜை அறையில் கூட இந்த விளக்கை தாராளமாக ஏற்றலாம். தரையில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் கடன் பட்டியலை வைத்து, அதன் மேல் ஒரு தட்டை வைத்து, அதன் மேல் மண் அகல் விளக்கை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு, கற்பூராதி தைலம் 1 ஸ்பூன் அந்த எண்ணெயோடு கலந்து விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கு முன்பு சிறிது நேரம் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் கடன் படிப்படியாக குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த விளக்கை ஏற்றி வைத்து விட்டால் கடன் குறைந்து விடுமா. அப்படி எல்லாம் கேட்கக்கூடாது. நம்பிக்கையோடு இந்த விளக்கானது, கடன் பட்டியல் காகிதத்தின் மேலே எவ்வளவு நேரம் சுடர்விட்டு எரிகின்றதோ அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய கடன் படிப்படியாக குறைய தொடங்கிவிடும். கடன் வாங்கும் போது யோசித்தீர்களா, அப்போது விளக்கை ஏற்றும் போதும் எந்த நெகட்டிவ் எண்ணங்களும் இல்லாமல் பாசிட்டிவாக ஏற்றிப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் கடன் தொல்லைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த விளக்கு ஏற்றி வைத்தால், தெய்வங்கள் விரும்பி நம் வீட்டிலேயே தங்கும். இறைவனை ஈர்க்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்த அந்த விளக்கை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த விளக்கை காலை அல்லது மாலை வேலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஏற்றுங்கள். எவ்வளவு நேரம் இந்த விளக்கு எரிந்தாலும் சரி, தவறு கிடையாது. உங்கள் சவுகரியம் போல அதை பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது ஏற்றுங்கள் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -