கடன் தொல்லை நீங்க பரிகாரம்

- Advertisement -

கடன் என்பது எந்த ஒரு நபருக்கும் ஏற்படக்கூடாத ஒன்று என்பது, அந்தப் பிரச்சினையால் நன்கு அவதிப்பட்டவர்களுக்கு தெரியும். என்னதான் சிலர் கடன் வாங்க கூடாது என கொள்கையோடு இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்களை கடன் வாங்கச் செய்து விடும். அதிலும் வாங்கிய கடனை முறையாக கட்ட இயலாத போது பலவிதமான அவலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி கடன் ஏற்பட்டு வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பவர்கள், அந்தக் கடன் தொல்லை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தொல்லை பரிகாரம்

மிகக் கடுமையான கடன் பிரச்சினைகளால் தவிர்ப்பவர்களுக்கு அந்த கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர உதவும் வழிபாடாக பைரவர் வழிபாடு இருக்கிறது. திங்கட்கிழமை அல்லது வியாழக்கிழமை இரவு ஒரு சிறிய வெள்ளை நிற பருத்தித் துணியில் 27 மிளகுகளை போட்டு முடிந்து, அதை உங்கள் தலையணை கீழ் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்ததும், அந்த 27 மிளகுகள் கொண்ட வெள்ளை நிற முடிச்சை எடுத்து கொண்டு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

கோயிலில் பைரவர் சன்னதிக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில், அந்த மிளகு முடிச்சை திரியாக வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேற்சொன்ன படி தொடர்ந்து 9 வாரங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு கடுமையான கடன் பிரச்சனையும் தீர்ந்து விரைவில் கடன் அடைக்க கூடிய வழியை பைரவ பெருமான் அருள்வார்.

கருப்பு மிளகுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து, உங்கள் வீட்டை சுற்றி வந்து திரிஷ்டி சுற்றி, உங்களுக்கும் திருஷ்டி சுற்றிக்கொண்டு பிறகு வீட்டிற்கு வெளியில் இந்த கருப்பு மிளகு, உப்பு கலவையை தீயில் போட்டு விட வேண்டும். அந்த நெருப்பில் மிளகும், உப்பும் எப்படி வெடிக்கின்றதோ, அதேபோன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனை படிப்படியாக குறையும் என்பது தாந்திரிக பரிகார நிபுணர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

கடன் பிரச்சனையால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பவர்கள் தினமும் காலையில் தொழில், வியாபாரங்கள் நிமித்தமாக வெளியில் செல்லும் பொழுது லவங்கம் 5 எண்ணிக்கையில் எடுத்து, அத்தோடு சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து, இரண்டையும் தூய்மையான பசு நெய்யில் போட்டு தீ மூட்ட வேண்டும். இவை நன்கு எரிந்து முடிந்ததும், அதில் இருக்கும் சாம்பலை சிறிதளவு தொட்டு, உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு வெளியில் செல்வதாலும் கடன் சுமை பாதிப்பு குறையும்.

இதையும் படிக்கலாமே: அரசு பணி கிடைக்க பரிகாரம்

தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனை தீர நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு திருமால் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கின்ற நந்தவனத்தில் இரண்டு வாழை பழ மர கன்றுகளை நட்டு வைத்து, தங்களால் இயன்றவரை அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தால், உங்களுக்கு இருக்கின்ற கடன் சுமை விரைவில் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

- Advertisement -