‘நான் கடனே வாங்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக கூறும் டாப் 5 ராசிகள்! இவர்கள் கடன் வாங்காமல் இருந்து விடுவார்களா?

astro-cash
- Advertisement -

வாழ்க்கையில் எல்லோருக்குமே கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு என்று அவன் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் இருக்கும் என்கிறது ஜோதிடம். ஆக கடனே இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு கடன் ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ‘நான் என் வாழ்க்கையில் கடனே வாங்க வாங்க மாட்டேன்!’ என்று பிடிவாதமாக கூறும் அந்த டாப் 5 ராசிகள் யாரெல்லாம்? என்று நாமும் தெரிந்து கொள்வோமா?

மேஷம்:
பொதுவாக 12 ராசிகளில் முதன்மையாக இருக்கும் மேஷ ராசி அதிர்ஷ்டம் செய்த ராசி என்று தான் கூற வேண்டும். இந்த கடன் என்கிற வார்த்தையை பொருத்தவரை மேஷ ராசியில் பிறந்த ஆண்களை விட பெண்கள் மிகப் பிடிவாதமாக நான் கடனே வாங்க மாட்டேன் என்று கூறுவார்கள். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மட்டுமல்ல! பொதுவாக எல்லா ராசியில் பிறந்த பெண்களுக்கும் கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம் தான் ஆயினும் மிகப் பிடிவாதமாக கடன் வாங்கக் கூடாது என்கிற வைராக்கியம் கொண்ட பெண்களில் மேஷ ராசி பெண்கள் முதன்மை இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் தன் வாழ்நாள் லட்சியமாக கடன் வாங்கக் கூடாது என்கிற கொள்கையைக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களால் அதை அதிக நாட்கள் வைராக்கியத்துடன் கடைபிடிக்க முடியாது போகும் சூழ்நிலை வந்துவிடும். எவ்வளவு உறுதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த உறுதி தளர்ந்து அவர்கள் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். எனினும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப கடன் வாங்குவது இவர்களுடைய பலமாகும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் கடனே வாங்க மாட்டேன் என்று சிறு வயது முதலே தீர்க்கமான முடிவுடன் இருப்பார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலையும் தன் தகுதிக்கு ஏற்ப எது இருக்கிறதோ! அதை வைத்துக் கொண்டு பிழைப்பை நடத்துவார்கள். ஆனால் வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் அவர்கள் தகுதிக்கும் கீழாக குறைந்த அளவில் கடனை வாங்குபவர்களாக இருப்பார்கள். கடன் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும்? என்பதை இவர்கள் மற்றவர்களை பார்த்து அனுபவித்திருப்பார்கள் எனவே இவர்களுக்கு அந்த நிலைமை வரக்கூடாது என்ற சாமர்த்தியமாக செயல்படுவார்கள்.

- Advertisement -

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னிடம் இருப்பதை வைத்து திருப்பதி கொள்வதை விரும்புவார்கள். கடன் வாங்குவதில் இவர்களுக்கு துளியும் நாட்டம் இல்லாமல் இருக்கும். ஒரு சிலர் ஆடம்பர செலவுக்காக கூட கடன் வாங்கி செய்வதை பார்த்திருப்போம் ஆனால் இவர்கள் அத்தியாவசிய செலவுக்கு கூட கடன் வாங்குவதை விரும்புவதில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிய சாவதை விட வறுமையில் சாவதே மேல் என்று நினைப்பார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் கடன் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள் ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியே இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்சனை என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படி வாங்கும் கடன்களை எப்படியாவது முடித்து விட்டு அடுத்து எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்கக் கூடாது என்ற கொள்கையை வைராக்கியமாக கொண்டிருப்பார்கள்.

- Advertisement -