கடன் வராமல் தடுக்க

mahalashmi3
- Advertisement -

நம்முடைய குடும்பத்திற்கு கடன் வருவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். நல்லாதான் சம்பாதித்துக் கொண்டு இருப்போம். நல்லா தான் செலவு செய்வோம். வீட்டிற்கும் நம்முடைய மனைவி பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்போம். உதாரணத்திற்கு உங்கள் மனைவிக்கு இரண்டு பவுனில் ஆசையாக செயின் வாங்கிப் போட்டுட்டீங்க.

இதை உங்க சொந்தக்காரங்க பார்த்துட்டாங்க. கண்திருஷ்டி படுமா படாதா. நம்மால் இப்படி வாழ முடியவில்லையே. நம்முடைய கணவர் நமக்கு இப்படி நகைகள் வாங்கி தரவில்லையே என்ற ஏக்கம் நிச்சயம் பார்ப்பவர்களுக்கு வரும். அந்த ஏக்கம் தான் கண் திருஷ்டியாக மாறி உங்கள் குடும்பத்தை படாத பாடு படுத்தி எடுக்கும்.

- Advertisement -

இவங்க எல்லாம் நம்ப சொந்தக்காரங்க தான் என்று வெள்ளை மனதோடு நீங்கள் வாங்கிய பொருட்களை அவர்களிடம் காட்டலாம். ஆனால் பிரச்சனையே அதில் தான் ஆரம்பிக்கும். இதனால் நிச்சயம் அடுத்தடுத்து உங்க வீட்டில் பணக்கஷ்டம் வரும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சின்ன சின்ன பொருள் இழப்பு, நகை இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி விலக

இந்த பரிகாரத்திற்கு கல் உப்பு, கிராம்பு, வால் மிளகு, இந்த மூன்று பொருட்கள் தேவை. ஒரு கண்ணாடி பௌலில் கல்லுப்பை நிரம்ப கொட்டி வைத்துவிட்டு அதில் 11 வால் மிளகை மேலே தூவி விடுங்கள். 4 கிராம்பை அந்த கிண்ணத்தில் நான்கு பக்கத்திலும் சொருகி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பரிகாரம் இவ்வளவுதான். இதை உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விட்டால் உங்கள் வீட்டிற்குள் வருபவர்கள், கெட்ட எண்ணத்தோடு உங்கள் வீட்டை பார்த்தாலும் சரி, நீங்கள் வீட்டை அலங்கரித்து வைத்திருக்கும் ஆடம்பரமான பொருட்களை பார்த்தாலும் சரி, உங்கள் மனைவி போட்டு இருக்கும் நகைகளை பார்த்தாலும் சரி, பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு பொருட்களை பார்த்தாலும் சரி, அந்த கண்ணோட்டம், கண் திருஷ்டியின் மூலம் வரக்கூடிய பாதிப்பு தவிர்க்கப்படும்.

அந்த நெகட்டிவ் எனர்ஜியை இந்த பவுலில் இருக்கும் கல் உப்பு வால்மிளகும் ஈர்த்துக் கொள்ளும். கிராம்பானது உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த ஒரு பரிகாரத்தை உங்கள் வீட்டில் நீங்கள் செய்துவிட்டால் போதும். உங்களுடைய வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. வந்த வருமானம் வீண் விரயமாகாது.

இதையும் படிக்கலாமே: வற்றாத செல்வத்தை பெற லட்சுமி நரசிம்ம வழிபாடு

தேவையற்ற செலவுகள் குறைக்கப்படும். பணம் சேமிப்பில் தங்கும். எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு நஷ்டத்தில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உங்களுக்கு ஏற்படாது. ஆன்மீகம் சார்ந்த இந்தக் குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -