வற்றாத செல்வத்தை பெற லட்சுமி நரசிம்ம வழிபாடு

lakshmi narachimmar manthiram
- Advertisement -

தெய்வங்களையே நாம் இரண்டு வழியாக வழிபாடு செய்கிறோம் ஒன்று உக்கிர தெய்வங்கள் மற்றொன்று சாந்தம் தெய்வங்கள். பெரும்பாலும் யாரும் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது கிடையாது. ஏனெனில் உக்கிர தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்ற ஒரு எண்ணம் நம் அனைவர் மனதிலும் உள்ளது.

பெரும்பாலும் நம்முடைய வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரக் கூடிய ஆற்றலானது உக்கிர தெய்வங்களிடம் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த தெய்வங்கள் உக்கிரமாக மாறியதே தன் பக்தர்களை துன்பப்படுத்தியவர்களை அழிக்கத் தான்.

- Advertisement -

ஆகையால் உக்கிர தெய்வ வழிபாடு செய்வது நமக்கு நல்ல பலனையே தரும். அந்த வகையில் உக்கிர தெய்வமான நரசிம்மரை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய கடன் நீங்கி காரிய தடைகள் நீங்க செல்வ வளத்துடன் வாழலாம் என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி நரசிம்மர் மந்திரம்

இந்த லட்சுமி நரசிம்மரை நாம் மூன்று வகையில் வழிபாடு செய்யலாம். ஒன்று உக்கிர நரசிம்மர் இவர் நம்முடைய காரிய தடைகள் கடன்கள் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் வாழ வைப்பார். அடுத்து லட்சுமி நரசிம்மர் இவரை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

அடுத்தது யோக நரசிம்மர் இந்த நரசிம்மரை வழிபடும் போது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் பெறலாம். இந்த மூன்று தெய்வங்களையும் வழிபாடு செய்ய பெரிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் செய்யாமல் ஒரு எளிய மந்திரத்தை சொன்னாலே நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

இந்த வழிபாடு செய்ய லட்சுமி நரசிம்மர் படத்தில் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி படம் இல்லாத பட்சத்தில் பெருமாள் படத்தை நாம் லட்சுமி நரசிம்மராக பாவித்து வணங்கலாம். இந்த வழிபாடு செய்வதற்கு படத்தை மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள. அத்துடன் நெய்வேத்தியமாக பானகத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நம்முடைய ஒவ்வொரு பிரச்சனைக்கான மந்திரத்தை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் மனிதனை பாடாய் படுத்தும் கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கான மந்திரத்தை பார்க்கலாம். ஓம் ருத்ர நரசிம்மராய நமக என்ற இந்த மந்திரத்தின் 16 முறை சொல்லி வழிபாடு செய்த பிறகு பானகத்தை நெய்வேதியமாக அனைவரும் அருந்தலாம்.

அடுத்து செல்வ வளம் பெருகுவதற்கான மந்திரத்தை பார்க்கலாம். ஓம் லக்ஷ்மி நரசிம்ம ராய நமக என்ற மந்திரத்தை 16 சொல்ல வேண்டும். மந்திரம் மட்டும் தான் வேறு வழிபாடு எல்லாம் ஒரே மாதிரி செய்தாலே போதும். இதே போல் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கி யோகத்தை பெற ஓம் யோக நரசிம்ம ராய நமக என்ற இந்த மந்திரத்தை 16 முறை சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாட்டின் போது ஒரு மந்திரத்தை தான் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. மூன்று மந்திரத்தையும் ஒவ்வொன்றையும் 16 முறை சொல்லி வழிபாடு செய்யலாம். ஏனெனில் எல்லாமே மனிதனுக்கு அவசியமானது தானே. இந்த வழிபாட்டை நீங்கள் தினந்தோறும் காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ஏனெனில் எந்த ஒரு வழிபாட்டின் பலனும் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப சீக்கிரம் கிடைப்பதும் கால தாமதம் ஆவதும் நடக்கும். ஆகையால் வழிபாட்டை தொடர்ந்து செய்வது அவசியம். இந்த முறையில் நரசிம்மரை வழிபட்டு வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பமாய் வாழ படி தேடிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -