கடனாக கொடுத்த பணம் நகை அனைத்தையும் திரும்ப பெற ஞாயிற்றுக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படி வழிபட்டு வந்தாலே போதும். வாங்கியவர்களே உங்களைத் தேடி வந்து திருப்பித் தருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

durgai panner rose cash
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையே மிகவும் மோசமானதாக தான் உள்ளது. கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் கஷ்டமான சூழ்நிலையில் நம்மிடம் வந்து பணம் கேட்டு பணத்தை கொடுத்த பிறகு அதை திரும்ப பெற முடியாமல் தவிப்பவர்களும் அதிகமாகத் தான் உள்ளார்கள். இதில் பணம் மட்டுமல்லாது அவசர தேவை என தெரிந்தவர்களுக்கு நகையாக கொடுத்து அதை திரும்ப வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து ஒரு கட்டத்தில் வரவே வராது என்று முடிவிற்கு வந்தவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

இப்படி உதவியாக ஒருத்தருக்கு நகையோ பணமோ கொடுத்து திரும்ப வராமல் இருக்கும் பட்சத்தில் இந்த வழிபாடு செய்தால் நிச்சயமாக திரும்ப கிடைக்கும். இது உதவியாக மட்டுமின்றி ஒரு சிலர் வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழில் செய்வார்கள் அவர்கள் இப்படி ஏமாந்து இருந்தாலும் இது போல செய்யலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முடிந்த வரையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்க பழகிக் கொள்வதே நல்லது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கொடுத்து ஏமாந்த பணம் நகை இவற்றை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடனாக கொடுத்த பணம் நகை இவற்றை திரும்ப பெற
இந்த வழிபாட்டை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 . 30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை தான் வணங்க வேண்டும். பொதுவாக துர்க்கை அம்மனை வெள்ளி, செவ்வாய் ராகுகால நேரத்தில் வழிபடுவது தான் முறை. ஆனால் இந்த வழிபாட்டு முறையை ஞாயிற்றுக்கிழமை தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாடு செய்யும் போது அசைவ உணவை தவிர்த்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்ய துர்க்கை அம்மனுக்கு 54 எலுமிச்சை பழங்களை மாலையாக தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் பன்னீர் ரோஜா மலரையும் மாலையாக தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவையல்லாது ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், பன்னீர் ரோஜா இதழ்கள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை சிவ ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு தான் இந்த வழிபாடு செய்ய வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்த எலுமிச்சை பழம் மாலை, பன்னீர் ரோஜா மாலை, கிராம்பு பச்சை கற்பூரம் கலந்த கலவை இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆலயத்தில் அர்ச்சகர் இடம் கொடுத்து சாற்றி வழிபடுங்கள். இந்த பச்சைக் கற்பூர கிராம்பு கலவி அம்மனுடைய பாதத்தில் வைத்து விடுங்கள். அதன் பிறகு துர்க்கை அம்மன் முன்பாக தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது அந்த தீபத்தின் முன் அமர்ந்து நீங்கள் யாருக்கு பணம் நகை கொடுத்தீர்களோ அவர்களுடைய பேரை சொல்லி அது உங்களுக்கு திரும்ப வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பிரார்த்தனை செய்யும் பொழுது முக்கியமாக செய்ய வேண்டியது, நீங்கள் தொலைபேசியை அணைத்து விட வேண்டும். அதே நேரத்தில் இந்த பூஜை தொடங்கி முடியும் நேரம் வரை நீங்கள் யாரிடமும் பேசாமல் மௌனமாக தான் இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஆலயத்தில் அமைதியாக அமர்ந்து உங்களுடைய வேண்டுதல்களை அம்மனிடம் சொல்லி வேண்டிக் கொண்டு ஆலயத்தை விட்டு வெளிவந்த பிறகு பேசலாம்.

இதையும் படிக்கலாமே: நிறைய காசு தரும் கற்றாழை பரிகாரம். வீட்டில் இருக்கும் கற்றாழை செடிக்கு இப்படி தண்ணீர் ஊற்றினால் பொன் பொருள் சேர்க்கை வீட்டில் அதிகமாக இருக்கும்.

இந்த வழிபாட்டை தொடங்கிய ஒரு சில நாட்களுக்குள்ளாகவே நீங்கள் கொடுத்த பணமும் நகையே உங்களுக்கு திருப்பி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்த உடனே ஒரு சிலருக்கு பலன் தெரியும். ஒரு சிலருக்கு கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததை விட இது விரைவில் உங்களுக்கு கிடைக்க வழி செய்யும் என்று அணித்தரமாக சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நீங்கள் ஏமாந்து அனைத்தையும் திரும்ப பெற வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -