கடன் வராமல் தடுக்க ஏற்ற வேண்டிய விளக்கு

vilakku
- Advertisement -

துரதிஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் துன்பமும் சேர்ந்து வாழ்க்கையில் வந்து தொற்றிக் கொள்ளும். துரதிஷ்டம் வரும்போது நமக்கு முதலில் வரக்கூடிய துன்பம் என்ன தெரியுமா. பணக்கஷ்டம், கடன், வறுமை. இதுதான் துரதிஷ்டத்தின் ஒட்டுமொத்த மூட்டை. இந்த துரதிஷ்டத்தால் வரக்கூடிய கடனை விரட்டி அடிக்க ஆன்மீகத்தில் மிக மிக எளிமையான, சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

அதிலும் மாதத்தில் மூன்று நாள் மட்டும் செய்ய வேண்டிய பரிகாரம். இந்த விளக்கை ஏற்றக்கூடிய வீட்டிற்குள் கடன் நுழையாது. துரதிஷ்டம் நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. வாங்கிய கடனை எல்லாம் கூட சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிட்டு, வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய சக்தி இந்த விளக்குக்கு இது. வாங்க அந்த விளக்கை வீட்டில் எப்படி ஏற்றுவது என்பதை பற்றிய தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

துரதிஷ்டத்தை துரத்தி அடிக்க விளக்கு

இந்த விளக்குக்கு ஏற்ற நமக்கு தேவையான பொருட்கள் ஏலக்காய் விதை பொடி, ஓமம் பொடி, அதிமதுர பொடி. இது மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடியாக வாங்கிக் கொண்டால் சரி, இல்லை இந்த மூன்றையும் முழுசாக வாங்கி நீங்களே பொடியாக அரைத்துக் கொண்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். ஓமம் பொடி 100 கிராம், அதிமதுரப்பொடி 100 கிராம், எடுத்துக் கொண்டால் அதில் 1 ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.

200 ml தேங்காய் எண்ணெய் எடுத்துக்கோங்க. ஒரு பாத்திரத்தில் இந்த தேங்காய் எண்ணெயை ஊற்றி இந்த 3 பொடிகளையும் போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சூப்பரான ஒரு வசிய தன்மை கொண்ட எண்ணெய் தயார். இந்த எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். மாதத்தில் 2 கரிநாள் வரும். 1 பவுர்ணமி திதி வரும்.

- Advertisement -

இந்த நாட்களை காலண்டரை பார்க்கும்போது நீங்க கண்டுபிடிச்சிடலாம். இந்த 3 நாட்களில் பூஜை அறையில் ஒரு தாம்பூல தட்டின் மீது மண் அகல் விளக்கு வைத்து நீங்கள் தயார் செய்த வசிய சக்தி நிறைந்த இந்த தேங்காய் எண்ணெயை ஊற்றி, சாதாரண பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனம் உருகி பிரார்த்தனை வைக்க வேண்டும்.

இந்த விளக்கு மாதத்தில் மூன்று நாள் உங்களுடைய வீட்டில் எரியும்போது, உங்களுடைய வீட்டில் நிச்சயம் துரதிஷ்டம் அண்டாது. வீட்டை சுற்றி சுற்றி வரும் வறுமை வீட்டை விட்டு வெளியேறிவிடும். வீட்டிற்குள் செல்வ வளம் அதிகரிக்கும். தொடர்ந்து மூன்று மாதங்கள், மொத்தமாக ஒன்பது நாள், இந்த விளக்கை ஏற்றும் போதே நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வரனாக மாற ஈசன் வழிபாடு

வாழ்க்கையில் நீங்கள் எந்த விஷயத்தில் எல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கிறீர்களோ அதில் வெற்றி காணக்கூடிய வாய்ப்புகளையும் இந்த விளக்கு உங்களுக்கு கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். துரதிஷ்டம் கடன் துன்பம் அனைத்தும் உங்கள் வீட்டை விட்டும், உங்களை விட்டும் ஓடோடி விடும்.

- Advertisement -