கோடீஸ்வரனாக மாற ஈசன் வழிபாடு

sivan7
- Advertisement -

ஈசனை கும்பிடுபவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டம் தான் வரும். சோதனைகளை கொடுத்து, தன்னுடைய பக்தர்களை சோதித்துப் பல திருவிளையாடல்களை நடத்துவதில் இவனை மிஞ்ச இந்த உலகத்தில் வேறு ஆளே கிடையாது என்று சொல்லுவார்கள். சிவன் கோவிலுக்கு போனா கஷ்டம் வரும்னு யாராவது உங்களுக்கு சொல்லி இருந்தா அதை இன்றோடு மனதில் இருந்து அழிச்சிருங்க.

அந்த ஈசனை கும்பிட்டால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா. எந்த மந்திரத்தை சொல்லி, எந்த பூவை கொடுத்து ஈசனை வழிபாடு செய்தால் கோடீஸ்வரர் யோகத்தை பெற முடியும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கோடீஸ்வர யோகத்தை தரும் ஈசன்

முதலில் நம்முடைய வாழ்க்கை சீர் பட வேண்டும் என்றால், பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு தினமும் செல்லக்கூடிய வழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் உங்கள் வீட்டு பக்கத்தில் பழமை வாய்ந்த ஈசன் கோவில் இருந்தால் அங்கு சென்று தினமும் ஈசனுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்யுங்கள்.

சிவபெருமானுக்கு உங்கள் கைகளால் மல்லி பூவை வாங்கிக் கொண்டு போய் கொடுங்க. சிவனுக்கு வில்வ இலை தான் மகத்துவம் வாய்ந்தது. ஆனால் மகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த மல்லிகை பூவையும் ஈசனுக்கு கொண்டு போய் கொடுத்து வழிபாடு செய்யலாம். இதனால் உங்களுடைய பணகஷ்டம் தீரும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை இந்த வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதேபோல சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து 108 முறை பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை சொல்லுபவர்களை யாராலும் பண விஷயத்தில் தோற்கடிக்கவே முடியாது. சில பேர் பண விஷயத்தில் ரொம்பவும் பலவீனமாக இருப்பார்கள். அதாவது அடுத்தவர்கள் வந்து காசு என்று கேட்டால் கையில் இருக்கும் பணத்தை தூக்கி கொடுத்துடுவாங்க, தனக்கு என்று காசு பணத்தை வைத்துக் கொள்ளாமல் எல்லாம் காசையும் அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்தும் போவார்கள்.

ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு காசு இல்லை என்ற சூழ்நிலை வந்தால், அவர்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏமாளியாக இருப்பவர்கள் இந்த மந்திரத்தை சொன்னால் அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சிவன் கோவிலில் அமர்ந்து சொல்ல வேண்டிய சிவ மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சிவ சிவ, வசி வசி கோடீஸ்வர யோகம் தர
வர வர ஸ்வாஹா

எளிமையான மந்திரம் தான். மனப்பாடம் செய்து கொண்டு கூட நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லலாம். சிவன் கோயில்களுக்கு சென்று இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவபெருமானை நினைத்து ஒரு விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லும் போது முழுமையான பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு

வீட்டில் பெரும்பாலும் சிவனின் திரு உருவப்படம் இருக்காது. இருந்தாலும் மானசீகமாக சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தே படியேவும் செய்யலாம். பண விஷயத்தில் நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -