தெரியாமல் கூட இந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சாற்றி வழிபடாதீர்கள் பலன் இருக்காது தெரிந்து கொள்ளுங்கள்!

flowers
- Advertisement -

எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனியாக உகந்த பூக்கள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த பூக்களை சாற்றி வழிபடும் பொழுது முழுமையாக வழிபடும் பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. ஆனால் ஒரு சில பூக்களை கொண்டு சில தெய்வங்களை வழிபடக்கூடாது என்று அதே சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. அப்படியான பூக்கள் என்னென்ன? எந்த தெய்வங்களுக்கு இவற்றை சாற்றக்கூடாது? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தெய்வங்களுக்கு உகந்த பூக்கள் ஏராளம் உண்டு. அதிலும் நம் வீட்டிலேயே பூக்கக்கூடிய பூக்களை கொண்டு தெய்வங்களுக்கு போட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், சகல விதமான யோகங்களும் நமக்கு கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் வீட்டில் அதிக அளவு பூச்செடிகள் வளர்க்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர். ஆனால் இன்று எல்லா வீடுகளிலும் பூச்செடிகள் இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட பூக்களை கொண்டு வழிபடக்கூடாது என்று ஆன்மீக நூல்கள் சொல்லுகின்றன. அந்த வகையில் சிவபெருமானுக்கு தாழம்பூ சாற்றி வழிபடக்கூடாது என்று கூறுகிறது. தாழம்பூ நாகத்திற்கு உகந்தது என்று கூறுவார்கள். நாகத்தை அணிகலனாக சிவபெருமான் கொண்டிருந்தாலும், இந்த பூவை கொண்டு வழிபட்டால் பலன் இருக்காது என்று குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாலானோர் இல்லங்களில் அதிகம் வளர்க்கப்படும் இந்த செடி செம்பருத்தி ஆகும். செம்பருத்தி செடியிலிருந்து பூக்கும் செம்பருத்தி பூவை எல்லா விதமான தெய்வங்களுக்கும் வைத்து வழிபடலாம். ஆனால் விஷ்ணுவிற்கு செம்பருத்தி பூவை வைத்து வழிபடக்கூடாது, இதனால் பலன் இருக்காது என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ, பொன்னரலி போன்றவற்றை சாற்றி வழிபடுவார்கள் ஆனால் மகாலட்சுமிக்கு உகந்த துளசியை போட்டு விநாயகரை வழிபடக்கூடாது. இதனால் வேண்டுதல் நிறைவேறாது, பலன் இருக்காது என்று கூறுவார்கள். அதே போல பைரவருக்கு செவ்வரளி சாற்றி வழிபட வேண்டும். ஆனால் வெள்ளை அரளி மற்றும் மல்லிகை பூக்களை கொண்டு வழிபடக்கூடாது.

பைரவருக்கு சிகப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நம் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுவதாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது. ஆனால் வெள்ளை மலர்களை சாற்றி வழிபடக்கூடாது. அதிலும் குறிப்பாக மேலே கூறப்பட்ட இந்த ரெண்டு பூக்களை சாற்றி வழிபடக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் செல்வம் குறைந்து கொண்டே போகிறதா? அப்படின்னா நீங்க இந்த தவறுகளை செய்கிறீர்களானு பாருங்க! இதெல்லாம் செஞ்சா செல்வம் குறையுமாம்!

சூரிய பகவானுக்கு தும்பை பூவை அர்ச்சனை செய்து வழிபடக்கூடாது. சூரியன் தனித்துவம் வாய்ந்த ஒரு அனல் கிரகமாக இருக்கிறது. இந்த அனல் கிரகத்திற்கு மெல்லிய மென்முறுவலாக இருக்கக்கூடிய இந்த தும்பை பூவை சூட்டி வழிபடுவதால் பலன் இருக்காது என்று குறிப்பிடப்படுகிறது. அதே போல பார்வதி அன்னைக்கு வாசனை மிகுந்த மலர்களை சாற்றி வழிபடலாம். பாதிரி மலரை கொண்டு ஒருபொழுதும் வழிபடக்கூடாது என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது. இதுபோல ஏராளமான தெய்வங்களுக்கு, ஏராளமான பூக்கள் உகந்ததாக இருக்கிறது. சிலவை பலன் தராதவையாக இருக்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு வழிபடுவது விசேஷமான பலன்களை கொடுக்கும். அந்தந்த தெய்வங்களுக்கு உரிய மலர்களை சூட்டி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல் விரைவில் பலிதம் ஆகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -