உங்க வீட்டில் செல்வம் குறைந்து கொண்டே போகிறதா? அப்படின்னா நீங்க இந்த தவறுகளை செய்கிறீர்களானு பாருங்க! இதெல்லாம் செஞ்சா செல்வம் குறையுமாம்!

gajalakshmi-cash
- Advertisement -

வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம்முடைய செல்வ வளத்தை குறைத்து விடுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மகாலட்சுமிக்கு பிடிக்காத சில விஷயங்களை செய்தால் வீட்டில் அவள் தங்க மாட்டாள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நம் செல்வம் குறைவதற்கான காரணம் என்ன? நாம் செய்யும் தவறுகள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் முதலில் எச்சில் பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்கக்கூடாது. சிலர் காபி, டீ குடித்துவிட்டு கப்புகளை கூட கழுவாமல் ஆங்காங்கே வைத்து விடுவது உண்டு. இதனை பார்க்கும் மகாலட்சுமிக்கு உங்களிடம் இருக்க விருப்பம் இல்லாமல் போய்விடுமாம். அதனால் உங்களை துரதிர்ஷ்டம் துரத்தும், பொருளாதார ரீதியாக நீங்கள் நலிவடைவீர்கள்.

- Advertisement -

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தெந்த கிழமைகளில் தலைக்கு குளித்து பூஜை செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தலையை அலச வேண்டும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த நாட்களை தவிர மற்ற நாட்களில் தலைக்கு குளிப்பது முறையல்ல! அப்படி செய்யும் ஆண் அல்லது பெண்களிடம் செல்வம் நிலைப்பதில்லை என்று சில ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது.

வீட்டில் எந்த இடத்திலும் தண்ணீர் சொட்டி கொண்டிருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உடனடியாக அதனை சரி செய்து விட வேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டின் சுவற்றில், ஜன்னல்களில் கூட ஈரப்பதம் தேங்க விடக் கூடாது. சுவற்றில் ஈரம் பதிந்தால் அந்த வீட்டில் துர்தேவதைகள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. இதனால் மகாலட்சுமி அந்த இடத்தில் இருக்க விருப்பம் இல்லாமல் போய்விடுவாராம், எனவே செல்வ வளமானது குறைய துவங்கும்.

- Advertisement -

தனம், தானியம் பெருக முதலில் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிலர் சமையல் கட்டில் போட்ட பாத்திரங்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். சுத்தமாகவே இருக்காது. அப்படி இருக்கக் கூடாது. அடுப்பை எப்பொழுதும் கழுவி சுத்தம் செய்து அதற்கு கீழ் அரிசிமாவினால் கோலம் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து பின்னர் அக்னியை எரிய விட்டு சமைக்க ஆரம்பிக்க வேண்டும். அது போல முகத்தை கூட கழுவாமல் காலையில் முதல் வேலையாக அக்னியை பற்ற வைக்கக் கூடாது. இப்படி செய்யும் வீட்டில் மகாலட்சுமி நிலையாக தாங்குவது கிடையாது.

இதையும் படிக்கலாமே:
அரச மரத்துக்கு அடியில் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றினால் அரசர் போல வாழலாம். ராஜ வாழ்க்கையைப் பெற்றுத் தரும் ரகசிய பரிகாரம்.

அமாவாசை திதி என்பது பித்ருக்களுக்கு உகந்ததாக இருக்கிறது. இந்த வேளையில் வாசலை கூட்டிப் பெருக்கி கோலம் போடக்கூடாது என்று கூறுவது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் அதை யாரும் கடைபிடிப்பது கிடையாது. அமாவாசையில் கோலம் போடக்கூடாது. மேலும் கீரை உணவை கண்டிப்பாக அந்த நாளில் தவிர்க்க வேண்டும். இப்படி செய்யாமல் இருப்பதாலும் செல்வங்கள் குறையும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டுவது என்பது சிலரால் மட்டுமே முடிந்த விஷயமாக இருக்கிறது. முடிந்த மட்டிலும் நாமும் அனைவரிடமும் இன்முகத்துடனும், நட்பு பாராட்டி இருப்பதாலும் செல்வமானது அதிகரிக்கும் என்பதால் அதனை கடைபிடிக்கலாமே!

- Advertisement -