கடினமான காரியங்கள் வெற்றி பெற மந்திரம்

perumal manthiram
- Advertisement -

ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்கிறது. இந்த ஒவ்வொரு நாளும் கடவுளின் அனுகிரகத்தால் நமக்கு நல்லவிதமாக நிறைவடைகிறது அல்லது ஆரம்பிக்கிறது என்றுதான் கூற வேண்டும். அப்படி கடவுளின் அருளால் நாம் செய்யக்கூடிய செயல்கள் வெற்றியடைய வேண்டும் என்றால் அதற்காக நாம் சில வழிபாடுகளை மேற்கொள்வோம். இந்த வழிபாடுகளை மேற்கொள்வதோடு நம்முடைய முயற்சியும் நாம் செய்தால் தான் அந்த காரியங்கள் வெற்றி பெறும்.

எளிதில் வெற்றி பெறக்கூடிய காரியத்திற்கு நாம் பெரிதும் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நமக்கே சில காரியங்கள் கடினமானது என்று தெரியும் இருந்தும் அதை நாம் முயற்சி செய்வோம். அப்படி முயற்சி செய்யும்பொழுது அந்த கடினமான காரியங்கள் வெற்றி பெறுவதற்கு பெருமாளை நினைத்து எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

காக்கும் கடவுளாக திகழக்கூடியவர்தான் மகாவிஷ்ணு. நம்முடைய வாழ்நாளில் நாம் நல்லவிதமாக வாழ வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் பெருமாளை நாம் வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. பெருமாளை வழிபடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதால் நம்முடைய தேவைகள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பெருமாளை நினைத்து நாம் மந்திரத்தை கூறினோம் என்றால் அவரின் அருளால் நமக்கு நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியமும் நடைபெறும்.

ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாக கண்டிப்பான முறையில் விநாயகரை நாம் வழிபட்டு விட்டு தான் செய்வோம். காரிய தடைகளை நீக்கக்கூடிய அற்புதமான கடவுளாக விநாயகர் பெருமான் திகழ்கிறார். கடினமான காரியமாக நினைக்கக்கூடிய காரியத்தை செய்ய தொடங்கும் நாள் அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு மகாவிஷ்ணுவின் கையில் இருக்க கூடிய சக்கரத்தை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 48 முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சக்கர தாராய நமஹ”

பெருமாளின் ஒவ்வொரு அவதாரங்களிலும் அவருடன் இருக்கக்கூடியது தான் இந்த சக்கரம். அதுவும் குறிப்பாக அசுரர்களை வதம் செய்வதற்காகவே உருவெடுத்ததாக தான் இந்த சக்கரம் கருதப்படுகிறது. யாராலும் அழிக்க முடியாத வரங்களை பெற்ற அரக்கர்களை கூட இந்த சக்கரம் வதம் செய்திருக்கிறது என்பதால்தான் கடினமான காரியங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சக்கரத்தை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சக்கரத்தை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய காரியம் வெற்றி அடையும் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த காரியத்தில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளும் நீங்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் 48 முறை கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் அது வெற்றியடையும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் முழு நம்பிக்கையுடன் செய்தால் தான் அதற்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த மந்திரத்தை முழு மனதோடும் நம்பிக்கையோடும் சுதர்சன சக்கரத்தை மனதார நினைத்து கூற கண்டிப்பான முறையில் இறைவனின் அருளால் காரிய வெற்றி உண்டாகும்.

- Advertisement -