குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

kuzhanthaikal nandraga padikka
- Advertisement -

பெற்றோர்களாகிய அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கனவு தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான். தங்களுடைய தனிப்பட்ட ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு வாழ்நாள் முழுவதும் பாடுப்படுவது குழந்தைகளின் வளமான வாழ்க்கைக்கு தான். அத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக தான் இரவும் பகலும் பாடுபட்டு உழைக்கிறார்கள்.

அப்படி பாடுபட்டாவது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இத்தகைய முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு மந்திர வழிபாட்டையும் செய்யும் பொழுது குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தைகள் படிப்பில் முன்னேற சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த மந்திரத்தை புதன்கிழமையில் தான் சொல்ல வேண்டும். புதன் என்றாலே படிப்பு, ஞானம், அறிவு போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் தான் பிள்ளைகள் நல்ல ஞாபக சக்தியுடன் அறிவாற்றலையும் பெற்று திகழ வேண்டும் எனில் முதல் புதன் பகவானை வணங்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆகையால் இந்த மந்திரத்தை புதன்கிழமையில் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் சொல்லலாம் அல்லது மாலை 5 30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள்ளாக சொல்லலாம். அப்படி சொல்லும் வேளையில் பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு அந்த தீபத்தின் முன் அமர்ந்து சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் வேளையில் உங்கள் பிள்ளைகளையும் அருகில் அமர வைத்துக் அவர்களையும் சேர்த்து இந்த மந்திரத்தை சொல்ல சொன்னால் நல்லது.

- Advertisement -

லட்சுமி ஹயக்ரீவர் மந்திரம்

ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத்

இந்த மந்திரமானது ஹயக்ரீவரின் அருளை பெறுவதற்காக சொல்லப்படுவது ஹயக்ரீவர் ஆனவர் ஞானத்திற்கெல்லாம் அதிபதி என்று சொல்லப்படுகிறது. கல்விக்கு அதிபதியானவள் சரஸ்வதி தாயார் அவருக்கே ஞானத்தை போதித்தவர் இந்த ஹயக்ரீவர். ஆகையால் அவரை இந்த மந்திரத்தின் மூலம் வழிபடுவது குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டும் இல்லாது குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரித்து நல்ல ஞானத்தை பெற்று நல்ல நிலைக்கு செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தை புதன்கிழமை தோறும் 27 முறை தீபம் ஏற்றி வைத்து விட்டு தொடர்ந்து சொல்லிக் கொண்டே வாருங்கள். இதை எத்தனை காலம் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் கிடையாது கல்வி ஞானம் என்பதெல்லாம் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படுவது தான்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க மந்திரம்

ஆகையால் இதை சொல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பிரகாசமாக மாறும். இந்த மந்திர வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து ஹயக்ரீவரை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -