உங்கள் வீட்டிற்குள் பணம் வருவதை, தரித்திரம் தடுத்து நிறுத்துகிறதா? தரித்திரத்தை துரத்தியடிக்க வெறும் 3 கிராம்பை அகல் விளக்கில் இப்படி போட்டு வைத்தாலே போதும்.

cash6
- Advertisement -

நம் வீட்டில் பண கஷ்டம் வருவதற்கு முதல் காரணம், நம்மைப் பிடித்திருக்கும் தரித்திரம் தான். ஒரு வீட்டில் தரித்திரம் தானாக பிடிக்காது. அந்த வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுதான் தரித்திரத்தை வீட்டிற்குள் அழைக்கும். எந்த வீடு சுத்தபத்தமாக இல்லையோ, எந்த வீட்டில் தினம்தோறும் தீபம் ஏற்ற படவில்லையோ, எந்த வீட்டில் பெண்கள் மன நிம்மதியோடு வாழ வில்லையோ, எந்த வீட்டில் சண்டை சச்சரவுகளின் மூலம் தகாத வார்த்தைகள் உச்சரிக்க படுகின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் குடி கொள்ளத்தான் செய்யும். தரித்திரம் உள்ளே வந்ததும் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் தானாக வெளியே செல்ல தொடங்கி விடும்.

cash

ஆக, முதலில் மேலே சொன்ன தவறுகள் எல்லாம் உங்களுடைய வீட்டில் நடக்குமே ஆனால் அதையெல்லாம் திருத்திக் கொண்டு, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் நிச்சயமாக கைமேல் பலனை பெற முடியும். எந்த வீட்டில் மன நிம்மதி இல்லையோ அந்த வீட்டில் பரிகாரங்கள் பலனளிக்காது. எந்த வீட்டில் மகாலட்சுமி அம்சத்துடன் இருக்கும் பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்களோ, அந்த வீட்டிலும் நிச்சயமாக மகாலட்சுமி தங்கவே மாட்டாள் என்பது தான் உண்மை.

- Advertisement -

சில பேருக்கு இது புரிவது கிடையாது. வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கஷ்டப்படுத்தி விட்டு, அதாவது வீட்டில் இருக்கும் பெண்களை துன்பப்படுத்தி துயரப்படுத்தி, தரித்திரத்தை வீட்டிற்குள் அழைக்கும் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெண்களை கண் கலங்க விடாதீர்கள். சரி, பதிவிற்கு செல்வோம்.

krambu

இந்த பரிகாரத்தை வியாழக் கிழமை உங்களுடைய வீட்டில் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமைகளில். அமாவாசை தினத்திலும் செய்யலாம். பகல் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது நன்மை தரும். ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 3 கிராம்புகளை போட்டு கடுகு எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய வீட்டில் கொஞ்சம் இருட்டாக இருக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

எப்போதுமே இருட்டாக இருக்கும் இடத்தில்தான் எதிர்மறை ஆற்றலும் தரித்திரமும் குடிகொண்டிருக்கும். உங்களுடைய படுக்கை அறையில் இருள் சூழ்ந்த நிலை இருந்தாலும், அந்த இடத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம். சமையலறை இருள் சூழ்ந்த நிலையில் இருந்தாலும் அந்த இடத்தில் இந்த தீபம் ஏற்றலாம். உங்கள் வீடே இருள் சூழ்ந்து தான் இருக்கின்றது என்றால் இதே போல 3 விளக்குகளை தயார் செய்து ஆங்காங்கே வைத்து ஏற்றி விட்டாலே போதும்.

kadugu 4-compressed

வீட்டை பிடித்த தரித்திரம் வெளியே சென்றுவிடும். வீட்டிற்குள் லட்சுமிதேவி தானாக விரும்பி வாசம் செய்ய வருவாள். பணத் தடைகள் நீங்கும். மன நிம்மதி பெருகும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் விரட்டி அடிக்கப்படும். இத்தனை முறைதான் இந்த தீபத்தை வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு மன நிம்மதி இல்லை, வீட்டில் நிம்மதி இல்லை, சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே உள்ளது. பணத் தட்டுப்பாடு உள்ளது எனும் பட்சத்தில் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -