கருகருவென கட்டுக்கடங்காமல் காடு போல முடி வளர்ச்சியை பெற அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இந்த 1 பொருள் போதும். 1 முடி வளர வேண்டிய இடத்தில் நிச்சயமாக 100 முடிகள் வளர்வதை பார்க்கலாம்.

hair9
- Advertisement -

இப்போது நமக்கெல்லாம் 100 முடி வளர வேண்டிய இடத்தில் 1 முடிதான் வளர்கின்றது. அதனால்தான் ஸ்கால்ப்பில் நிறைய கேப் தெரிகிறது. அதாவது ஆங்காங்கே வழுக்கை சொட்டை போன்ற பிரச்சனைகள் நம்முடைய அழகை குறைத்து காட்டுகின்றன. உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளது. அந்த முடி உதிர்வைத் தடுத்து நிறுத்தி, முடி அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்றால், இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. சமையல் அறையில் அஞ்சரை பெட்டியில் இருக்கும் 1 ஸ்பூன் கடுகு போதும். முடியை அழகாக அடர்த்தியாக கருகருவென வளர செய்ய.

முதலில் இதற்கு நாம் கடுகை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் கொஞ்சம் நிறைய கடுகு போட்டு, பொடி செய்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டாலும் சரி. அல்லது தேவைப்படும் போது ஒரு சிறிய ஊரிலில் 1 டேபிள்ஸ்பூன் கடுகு போட்டு அதை நன்றாக இடித்து பொடி செய்து எடுத்துக்கொண்டாலும் சரி, அது நம்முடைய விருப்பம் தான். நமக்கு தேவை கடுகுப் பொடி.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் கடுகுப் பொடி 1 டேபிள் ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். 1 டம்ளர் தண்ணீர், 1/2 டம்ளர் அளவு வரும் வரை கொதிக்கட்டும். இது நன்றாக ஆறிய பின்பு இதை வடிகட்டி 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு விளக்கெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே 1 விட்டமின் ஆயில் ஜெல் சேர்த்தால் போதும். இதை நன்றாக குலுக்கி விட்டு அப்படியே தலையில் ஸ்பிரே செய்ய வேண்டியதுதான்.

உங்களுடைய தலையில் எண்ணெய் இருந்தாலும் சரி, அல்லது தலைக்கு குளித்துவிட்டு வந்து தலையை நன்றாக உலர வைத்து விட்டு அதன் பின்பு இதை ஸ்ப்ரே செய்து கொண்டாலும் சரி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த தண்ணீரை உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி ஸ்ப்ரே செய்துவிட்டு 5 நிமிடங்கள் உங்கள் கையை வைத்து மசாஜ் செய்யவேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இந்த தண்ணீரை தலைக்கு போட்டு வர உங்களுடைய ஸ்கால்ப்பில் புதியபுதிய முடிகள் வளர்ந்து வருவதை கண்கூடாக பார்க்கலாம்.

- Advertisement -

நீங்கள் தயார் செய்த இந்த தண்ணீரை அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை தலையில் ஸ்ப்ரே செய்து விட்டு மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. உங்களுக்கு தலைவலி வரும் என்றால் இந்த தண்ணீரை தலையில் நன்றாக ஸ்ப்ரே செய்து விட்டு மசாஜ் செய்துவிட்டு அதன் பின்பு சிறிது நேரம் ஃபேன் காற்றில் அமர்ந்து தலையை நன்றாக காய வைத்து விடுங்கள் அவ்வளவுதான்.

பெரும்பாலும் கடுகு எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால் நிறைய முடி வளரும் என்று சொல்லுவார்கள். ஆனால் அதற்கு பதிலாக இந்த தண்ணீரை பயன்படுத்தி பாருங்கள். இரண்டு மடங்கு அதிகமான ரிசல்டை நம்மால் பெறமுடியும். உங்களுக்கு முடி வளர ஆசையாக இருந்தால் இந்த சின்ன குறிப்பையும் பின்பற்றி பார்க்கலாம்.

- Advertisement -