இந்த 1 பொருளை உங்கள் கையால் காகத்திற்கு அடிக்கடி வையுங்கள். அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியால் உங்களுடைய குடும்பம் கஷ்டப்படாது. முன்னேற்றமும் தடைபடாது.

crow-food
- Advertisement -

நம்முடைய முன்னேற்றம் தடைபடுவதற்கு முதல் காரணம் என்ன. அடுத்தவர்களுடைய பொறாமை குணம். இவன் மட்டும் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரத்தில் படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, சம்பாதித்து, சொந்த வீடு கட்டி விட்டானே. நம்மால் இதுபோல வாழ முடியவில்லையே என்று அடுத்தவர்கள் நினைக்கக்கூடிய இந்த பொறாமை குணம் நம்மை நிச்சயமாக முன்னேற விடாது. அப்படியே எல்லா கஷ்டத்தையும் தாண்டி முன்னேறினாலும் வாழ்க்கையில் நிறைய துன்பங்கள் தொடர்ச்சியாக வரும். இந்த பொறாமை, கண் கொண்டவர்களிடமிருந்து நம் குடும்பத்தை பாதுகாப்பது எப்படி. ஆன்மீகம் சொல்லும் எளிமையான ஒரு பரிகாரம் இதோ உங்களுக்காக.

கண் திருஷ்டி நீங்க காகத்திற்கு வைக்க வேண்டிய பொருள்
தினமும் நம் கையால் காகத்திற்கு ஏதாவது ஒரு உணவு பொருளை வைத்தால் அது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். நம் குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என்பது இந்து சாஸ்திரத்தின் நம்பிக்கை. இப்படி தினமும் காகத்திற்கு உணவு வைக்கும் போது அதில் நீங்கள் கருப்பு திராட்சையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு நிறத்தில் திராட்சை கடைகளில் விற்கும் அல்லவா. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காகத்திற்கு பிஸ்கட் போடும்போது நாலு கருப்பு திராட்சையை சேர்த்து காகத்துக்கு உங்கள் கையால் வைத்தால் கண் திருஷ்டி உங்களை எதுவும் செய்யாது. உங்களுடைய முன்னேற்றமும் தடைபடாது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து பூஜை அறையில் மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்து பூஜை செய்வது மிக மிக சிறப்பு. இப்படி சர்க்கரை பொங்கல் செய்யும் போது அதில் ஏலக்காய் முந்திரி திராட்சை இந்த பொருட்களை எல்லாம் நெய்யில் வறுத்து சேர்ப்போம் அல்லவா. அதில் இந்த கருப்பு திராட்சையை நெய்யில் வறுத்து சர்க்கரைப் பொங்கலில் போட வேண்டும். இப்படி செய்த சர்க்கரை பொங்கலை வீட்டில் வைத்து நிவேதனம் செய்தாலும் சரி அல்லது அருகில் இருக்கும் கோவிலுக்கு கொண்டு போய் இறைவனுக்கு நிவேதனமாக வைத்துவிட்டு அதன் பின்பு அந்த சர்க்கரை பொங்கலை அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்தால் நம்முடைய முன்னேற்றம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். அவ்வளவுதான். இந்த சர்க்கரை பொங்கலையும் இறைவனுக்கு வைத்து விட்டு அதன் பின்பு காகத்திற்கு வைக்கலாம் தவறு கிடையாது.

காகத்திற்கு சாப்பாடு வைப்பதன் மூலம் நமக்கு இந்த நல்லது தான் நடக்கும் என்று நிச்சயமாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மக்கு நன்மையை தரும் ஒரு சின்ன பரிகாரம் தான் இது. சனி பகவானால் உண்டாக்கப்படும் தோஷங்கள் நிவர்த்தி அடைய, முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற, பித்ரு தோஷம் நீங்க, குடும்பம் விருத்தியாக இப்படி பல வகையான நன்மைகளை நமக்கும், நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் கொடுக்கும்.

- Advertisement -

பெரிய பணக்காரரா இருக்கிறவங்க எல்லாம் இப்படி பரிகாரத்தை செய்கிறார்களா என்று சில பேருக்கு சந்தேகம் இருக்கும். நிறைய பேருக்கு இயற்கையாகவே எதிர்மறை ஆற்றலை எதிர்க்கக்கூடிய சக்தி இருக்கும். அவர்களுக்கு கண் திருஷ்டி எதுவுமே படாது. ஆனால் சில பேர் பலவீனம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுடைய பொறாமை குணம் பட்டவுடன் அவர்களுடைய முன்னேற்றம் பாதிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: வராகித் தாயை வசியம் செய்து, வேண்டிய வரங்களை உடனடியாக பெற, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இந்த ஒரு விளக்கு ஏற்றினால் போதும். வாராஹித் தாயே வந்து உங்கள் பூஜை அறையில் அமர்ந்து கொள்வாள்.

இதற்கு நம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் ஆன்மீக ரீதியாக மேல் சொன்ன பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கும் எதிர்மறை ஆற்றலை எதிர்த்து போராடக்கூடிய சக்தி கிடைத்துவிடும். அதற்காகத்தான் இந்த பரிகாரங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -