வைத்த சாதத்தை காகம் வந்து எடுக்கவில்லை என்றால், குடும்பத்திற்கு தீராத கஷ்டம் வருமா? காகம் வந்து தினம் தினம் சாப்பாட்டை எடுக்க என்ன செய்வது?

crow
- Advertisement -

தினமும் நாம் வைக்கும் சாப்பாட்டை காகம் வந்து எடுக்க வேண்டும் என்றால், தினம் தினம் ஒரே நேரத்தில் காகத்திற்கு கட்டாயம் நாம் சாதம் வைக்க வேண்டும். அப்போது அந்த காகத்திற்கு தெரியும். தினமும் இந்த நேரத்திற்கு இந்த இடத்தில் வந்தால் சாதம் நமக்கு கிடைக்கிறது என்று. தினமும் வந்து அந்த சாப்பாட்டை அது எடுத்துக் கொள்ளும். இது ஒரு வழி. பெரும்பாலும் இது நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சில பேர் வீடுகளில் தினமும் வந்து சாப்பாடு எடுக்கும். ஆனால் சுவாமி கும்பிட்டு வீட்டில் பூஜையை முடித்துவிட்டு அந்த சாதத்தை கொண்டு போய் வைத்தால் காகம் வராது.

சில பேர் வீட்டில் அமாவாசை அன்று சாதம் சமைத்து பூஜை அறையில் படைத்து, அதை கொண்டு போய் வைத்தால் காகம் வந்து சாப்பிடாது. சில பேருக்கு இது ஒரு மனக்குறை ஆகவே இருக்கும். தினமும் காகம் வந்து உங்கள் வீட்டில் சாதம் எடுக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரப்படி காகம் என்பது முன்னோர்களாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எமலோகத்தில் வாசலில் காகம் உருவம் இருப்பதாகவும், சனி பகவானின் வாகனம் காகம் என்றும் சாஸ்திரி ரீதியாக சொல்லப்படுகிறது. ஆக காகம் என்றால் எமதர்மராஜா, சனி பகவான், முன்னோர்கள் இந்த மூவரையும் உள்ளடக்கி பார்க்கக் கூடியது தான் நம்முடைய இந்து சாஸ்திரம்.

தினமும் நீங்கள் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு சாதம் வைத்து விடுங்கள். எச்சில் படாத வெள்ளை சாதத்தில் ஒரு சொட்டு நெய், கொஞ்சமாக கருப்பு எள்ளு, கொஞ்சமாக உப்பு போட்டு உங்கள் கையாலேயே பிசைந்து கொண்டு போய் காகத்துக்கு வையுங்கள். இப்படி காகத்திற்கு அந்த சாதத்தை வைக்கும் போது முன்னோர்களின் மனதார நினைத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். எமதர்மராஜாவையும், சனி பகவானையும், மனதார நினைத்து நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை மன்னித்து தண்டனையை குறைக்க வேண்டும் என்ற படி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

தினமும் இதேபோல மனதில் நினைத்துக் கொண்டு சாதத்தை கொண்டு போய் காகத்திற்கு வையுங்கள். நிச்சயமாக நீங்கள் வைக்கும் சாதத்தை காகம் வந்து ஒரு சில நாட்களில் எடுக்க தொடங்கிவிடும். என்னதான் செய்தும் காகம் எங்கள் வீட்டிற்கு வந்து, வைத்த சாதத்தை எடுக்கவில்லை என்றால் ஏதோ ஒரு கெட்ட நேரம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு அர்த்தம். அதற்காக யாரும் பயந்து விட வேண்டாம். (கெட்ட நேரத்திலும் எந்த ஒரு பெரிய கெடுதலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி எல்லாம் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.)

காகம் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் இப்படி தொடர்ந்து சாப்பாட்டை வைத்து வாருங்கள். காகம் அல்லாமல் வேறு பறவைகள் வந்து அந்த சாதத்தை சாப்பிட்டாலும் தவறு கிடையாது. இப்படி வெறும் சாதத்தை வைக்கும் போது காகம் வரவில்லை எனும் பட்சத்தில் இதோடு மிக்சர், பிஸ்கட் போன்ற பொருட்களை கலந்தும் அந்த இடத்தில் வைக்கும் போது காகம் வந்து அந்த தின்பண்டங்களோடு சேர்த்து நீங்கள் வைத்த சாதத்தையும் எடுக்கும். உங்களுடைய கெட்ட நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நேரம் ஆக மாறிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -