தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.

crow-food
- Advertisement -

காசு பணம் இருக்குதோ இல்லையோ, வசதியான வாழ்க்கை சொத்து சுகம் இருக்குதோ இல்லையோ, நாம் எல்லாம் விரும்புவது எதை. நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருப்பதை தான். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் போது, வரக்கூடிய மனநிறைவும் சந்தோஷமும் கோடி ரூபாய் கையில் இருந்தாலும் நிச்சயமாக இருக்காது. சரி சரி, பணம்தான் இந்த உலகத்தில் பேசுது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதையும் குறை கூறவில்லை. இருப்பினும் வெறும் பணம், காகிதம். சுற்றத்தோடு நட்போடு நல்ல வாழ்க்கைக்கு தேவையான பணமே மகாலட்சுமி கடாட்சம். இதை புரிந்தவன் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயித்து விடுவான்.

போகட்டும், இப்போது இன்றைய பதிவிற்குள் செல்வோம். காகத்திற்கு தினமும் காலையில் எந்த ஒரு பொருளை எப்படி வைக்க வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் வைக்க வேண்டிய உணவு:
காகத்திற்கு எப்போது வேண்டுமென்றாலும் உணவு வைக்கலாம். தவறே கிடையாது. இருந்தாலும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு விட்டு, இரண்டே இரண்டு பிஸ்கட்டுகளை காகத்திற்கு வைத்துவிட்டு, உடைத்து சின்ன சின்ன துண்டுகளாக வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள். இதை தினமும் உங்கள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பிஸ்கட்டை காகம் வந்து எடுத்துச் செல்லும்.

காலை பசியோடு இருக்கும் அந்த காகத்திற்கு நீங்கள் உணவு வைப்பது எவ்வளவு சிறப்பு தெரியுமா. அந்த காகம் தன்னுடைய குஞ்சுகளை ஏதாவது ஒரு மரத்தின், கூட்டில் வைத்துவிட்டு இறை தேட வந்திருக்கும். அப்போது நீங்கள் வைக்கும் பிஸ்கட்டை கொண்டு போய் அந்த குஞ்சுகளுக்கு கொடுக்கும். பசியோடு இருக்கும் தன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்த உங்களை அப்போது அந்த காகம் எவ்வளவு தூரம் வாழ்த்தும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு நம்முடைய பிள்ளை பசியாக இருக்கிறது. அந்த நேரம் நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அப்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் உங்களுடைய மனது எவ்வளவு குளிரும். அதேபோல் தான் காகத்திற்கும் உணர்வு இருக்கிறது. பெரிய பெரிய அளவில் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட, காலையில் இந்த ஒரு நல்லதை செய்தால் போதும். குடும்பம் சுபிட்சம் பெறும்.

இதையும் படிக்கலாமே: இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும். உடம்பில் இருக்கும் கெட்டதும் மனதில் இருக்கும் கெட்டதும், வெகு தூரம் ஓடோடி விடும்.

அதே போல நீங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு மீதம் இருக்கும் சாப்பாட்டை ஒருபோதும் காகத்திற்கு வைக்காதீங்க. எச்சில் சாப்பாட்டை உங்கள் கையால் நீங்கள் காகத்திற்கு வைக்கக் கூடாது‌. நம் கையால் எச்சில் பொருட்களை காகத்திற்கு வைத்தால் அது பாவம் என்று சாத்திரம் சொல்கிறது. சாப்பிட்டு முடித்துவிட்டு மீதம் இருக்கும் சாப்பாட்டை பைரவருக்கு தான் வைக்க வேண்டும். வீதியில் திரியும் நாய்களுக்கு வையுங்கள். இவை எல்லாம் காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம்தான். ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -