இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும். உடம்பில் இருக்கும் கெட்டதும் மனதில் இருக்கும் கெட்டதும், வெகு தூரம் ஓடோடி விடும்.

sivan-mantra
- Advertisement -

சிலருடைய உடம்பில் நோய் நொடிகளும், மனதில் எதிர்மறை ஆற்றலும், தங்கி குப்பையாக இருக்கும். ஒரு சிலருடைய மனது எப்போது பார்த்தாலும் தீய எண்ணம் எழும். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்திப்பார்கள். நல்லதே தோன்றாது. கெட்ட கனவு வரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது கெட்டது நடக்குமோ அல்லது வீட்டில் சண்டை சச்சரவு வந்து விடுமோ, பணக்கஷ்டம் வந்துவிடுமோ என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது கூட இப்படி தவறான விஷயங்களை நினைத்து பிரார்த்தனை செய்வார்கள்.

சில பேருடைய மனது அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் வீடு வாங்கிட்டார்கள், அவர்கள் கார் வாங்கிட்டார்கள், அவர்கள் பட்டுப் புடவை வாங்கிட்டார்கள், நகை நட்டு வாங்கி விட்டார்கள் நம்மால் இதையெல்லாம் வாங்க முடியவில்லை. நாம் எப்போதுதான் இப்படி வாழ்வது என்று குடும்பத்தில் சண்டை போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- Advertisement -

இதுவும் தீய செயல்தான். இதுவும் எதிர்மறையான விஷயங்கள் தான். கடவுள் அவரவருக்கு என்னென்ன பாக்கியத்தை கொடுக்கிறார்களோ, அதுதான் கிடைக்கும். என்னதான் எண்ணெயை உடம்பில் தடவிக் கொண்டு தலையில் புரண்டாலும், ஓட்டுவது தான் ஒட்டும். நேர்மறையான எண்ணமும், நேர்மறையான சிந்தனையும் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும். உங்களுடைய மனதையும் உடம்பையும் நேர்வழிப்படுத்த எளிமையாக ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரம் இதோ உங்களுக்காக.

மனதையும் உடம்பையும் சுத்தப்படுத்தும் இரண்டெழுத்து வார்த்தை என்ன?
தினமும் இந்த வழிபாட்டை செய்ய முடிந்தால் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் பிசியாக இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அன்று சூரிய உதயமாகும் தெரியுமா காலை 5:45 லிருந்து 6:15 அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

முந்தைய நாலே வில்வ இலையையும் அருகம்புல்லையும் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வலது கையில் இரண்டு வில்வ இலை, இரண்டு அருகம்புல். இடது கையில் இரண்டு வில்வ இலை இரண்டு அருகம்புல் வைத்துக் கொள்ளவும். வலது கையில் இருக்கும் அருகம்புல்லையும் வில்வ இலையும் அப்படியே உச்சம் தலைக்கு கொண்டு போகனும். உள்ளங்கை மூடியே இருந்தாலும் சரிதான். உங்கள் கைகள் உச்சந்தலையில் இருக்க வேண்டும்.

உச்சந்தலையில் வலது கை இருக்க, அந்த இரண்டு இலைகளும் உச்சம் தலையில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் இழுத்துக் கொள்ளும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ‘சிவ சிவ’ என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும். அவ்வளவுதான். கணக்கு எல்லாம் கிடையாது. ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அந்த சூரிய உதயம் ஆகும் போது சிவபெருமானை நினைத்துக் கொண்டு இந்த இரண்டு வார்த்தையை சொல்ல தொடங்குங்கள். (மந்திரத்தை சொல்லிவிட்டு கையில் இருக்கும் இலைகளை கால்படாத இடத்தில் போடவும்).

இதையும் படிக்கலாமே: இந்த பிரதோஷ நாளில் விநாயகர் ஈஸ்வரர் இருவருக்கும் எளிமையான இந்த மலரால் அர்ச்சனை செய்தாலே போதும். நீங்கள் செல்வ செழிப்புடன் சீரும் சிறப்புமாக மாட மாளிகையில் வாழ்வது உறுதி.

உடம்பில் இருக்கும் நோயும் வெளியே சென்று விடும். மனதில் இருக்கும் அழுக்கும் வெளியே சென்று விடும். உங்களுடைய உடம்பு ஆரோக்கியம் பெறும். மனது இப்போதுதான் பிறந்த குழந்தை போல புத்துணர்ச்சியோடு இருக்கும். யாரை பார்த்தும் பராமரிப்படாது. எதிர்மறையான எண்ணங்களை நினைக்காது. உடம்பும் மனதும் லேசாக கூடிய எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -