நீங்கள் செலவு செய்த பணம் இரட்டிப்பாக மீண்டும் உங்கள் கைக்கே திரும்ப வர வேண்டுமா? பணத்தை இதில் வைத்து எடுத்து செலவு செய்து பாருங்கள்.

uppu-cash-salt
- Advertisement -

பெரும்பாலும் நம்மில் எல்லோருக்குமே கையில் இருக்கும் பணம் செலவே ஆகக்கூடாது என்ற எண்ணம் தான் இருக்கும். செலவு செய்யாத பணம் எப்படி பிரயோஜனமாக இருக்கும். சற்று யோசித்துப் பாருங்கள். பணம் என்று இருந்தால் தேவைக்காக செலவு செய்துதான் ஆக வேண்டும். நாம் செலவு செய்யக்கூடிய பணம், திரும்பவும் நம்முடைய கைக்கு வருமானமாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பணத்திற்கே ஒரு மதிப்பு. செலவே செய்யாமல் பணத்தை பீரோவில் பூட்டி வைப்பதன் மூலம், எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்கப் போவது கிடையாது. செலவு செய்யாத பணம் வெறும் காகிதத்திற்கு சமமானது தான். எல்லோரையும் இன்றைய சூழ்நிலையில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும், இந்த பணத்தை எப்படி செலவு செய்தால் மீண்டும் மீண்டும் அந்தப் பணம் நம்மை தேடி வரும் என்பதை பற்றிய எளிமையான தாந்திரீக பரிகாரம் இதோ உங்களுக்காக.

செலவு செய்த பணத்தை, மீண்டும் வருமானமாக பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
உங்கள் கையில் இருக்கும் பணத்தை உங்கள் தேவைக்காக செலவு செய்கிறீர்கள். அப்படி செலவு செய்யும்போது ‘இந்த பணம் என் கையை விட்டுப் போகிறதே என்ற கஷ்டத்தோடு செலவு செய்யக் கூடாது. என் கையில் இருக்கும் மகாலட்சுமியை, என் தேவைக்காக நான் செலவு செய்கின்றேன். இந்த பணம் மீண்டும் என்னுடைய தேவைக்காக, என்னிடமே வருமானமாக வந்து சேர்ந்து விடும்’ என்ற நேர்மறை எண்ணத்தோடு தான் பணத்தை செலவழிக்க வேண்டும் ‌

- Advertisement -

ஒரு கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே பாதி அளவு கல் உப்பை நிரப்பி விடுங்கள். அதன் மேலே நீங்கள் செலவு செய்ய வேண்டிய பணத்தை வைக்க வேண்டும். தினசரி செலவுக்கு சரி அல்லது நீங்கள் ஏதோ ஒரு பெரிய செலவாக செய்யப் போகிறீர்கள் என்றாலும் சரி, அந்த ஜாடியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்தால் நீங்கள் செலவு செய்த பணம் மீண்டும் உங்கள் கைக்கு திரும்பவும் வரும்.

பீங்கான் ஜாடி, கண்ணாடி ஜாடி எதுவுமே உங்கள் கையில் இல்லையா தேங்காய் கொட்டாங்குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே நன்றாக சுத்தம் செய்துவிட்டு, கல்லுப்பை கொட்டி விட்டு, அதன் மேலே பணத்தை வைத்து அதை எடுத்து செலவு செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் செலவு செய்த பணம் இரட்டிப்பாக உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

இது ஒரு சூட்சமமான எளிமையான தாந்திரீக பரிகாரம் தான். மகாலட்சுமி தாயை வேண்டி ஆன்மீகத்தை மனதில் வைத்துக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு பணக்கஷ்டம் என்பது நிச்சயம் வராது. லட்சுமி கடாட்சம் அந்த வீட்டில் நிறைவாக இருக்கும். ஆனால் ஒரு விஷயம் ஜாடியிலோ,  கொட்டாங்குச்சியிலோ வைத்த உப்பை நீங்கள் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு மாதம் கழித்து அந்த உப்பை எடுத்து தண்ணீரில் தான் கரைத்து விட வேண்டும்.

நாளை செலவுக்கான பணத்தை கல்லுப்பில் இன்று வைத்து விடுங்கள். ஒரு நாள் இரவு அந்த பணம் அந்த கல்லுப்புக்கு மேலேயே இருக்கட்டும். கல்லுப்பில் இருக்கும் தண்ணீர் பட்டு பணம் ஈரம் ஆகிவிடும் என்றால், ஒரு கவரில் அந்த பணத்தை போட்டு கல் உப்பில் வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த எளிமையான பரிகாரம் உங்களுடைய பண பிரச்சனையை படு வேகமாக குறைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: குப்பையில் தூக்கி போடும் பூண்டு தோலுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? இத்தனை நாளா இது தெரியாமலா தங்கத்துக்கு நிகரான இந்த பொருளை தூக்கி குப்பையில் போட்டோம்.

கல்லுப்புக்கும் மகாலட்சுமிக்கும் பணத்திற்கும் அப்படி ஒரு பிணைப்பு இருக்கிறது. அதை பரிகாரம் செய்து பார்ப்பவர்களால் மட்டும்தான் உணர முடியும். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு நம்பிக்கை கொடுத்தால், பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -