தலையும் சரியில்லை, தலையெழுத்தும் சரியில்லை என்று நினைப்பவர்கள் 8 தீபங்களை இங்கே ஏற்றி வைத்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் தெரியுமா?

kala-bairavar-el-deepam
- Advertisement -

ஒரு சிலருக்கு வாழ்க்கைக்குள் பிரச்சனை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ அந்த பிரச்சினையே வாழ்க்கையாக மாறிவிடும். இன்றைக்கு தீர்ந்து விடக்கூடிய பிரச்சனை அல்லது நாளைக்கு தீர்ந்துவிடும் என்கிற பிரச்சனைகளுக்கு நாம் அதிகமாக கவலைப்பட போவதில்லை ஆனால் என்றுமே தீராது அல்லது என்றாவது ஒருநாள் தீர்ந்து விடுமா? என்கிற கேள்வியில் நிற்கும் பிரச்சனைகளுக்கான விடையை தேடி அலைவதில் பலரும் இருக்கின்ற பாதி முடியையும் இழந்து விடுகின்றனர். இப்படியான தலைவிதியை மாற்றக்கூடிய சக்தி சனி பகவான் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அவருக்கு எட்டு தீபங்கள் இவ்வாறு ஏற்றி வர உங்கள் காலமும் அதிர்ஷ்டமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியான ஒரு சக்தி வாய்ந்த எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் தலையெழுத்தை தலைகீழாக புரட்டிப் போடக் கூடிய இரண்டு பெயர்ச்சி உண்டு. அதில் ஒன்று குரு பெயர்ச்சி, இன்னொன்று சனி பெயர்ச்சி. சனி பெயர்ச்சி வந்து விட்டாலே எல்லோருக்கும் ஒரு கலக்கம் ஏற்படுகிறது. அடுத்த சில வருடங்களுக்கு சனியின் ஆதிக்கம் எப்படி இருக்க போகிறதோ? என்கிற பயமும், பதட்டமும் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய சனி பகவான் தொல்லையால் அவதிப்படும் ராசிக்காரர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய தலையெழுத்து மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு. இந்த இரும்பினால் ஆன ஒரு கிண்ணம் அல்லது பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் 8 இரும்பு கிண்ணங்கள் அல்லது 8 இரும்பினால் ஆன அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு புதிய கருநீல நிற துணியை எடுத்து எட்டு சதுரங்களாக சிறிய சிறிய அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் கொஞ்சம் கொஞ்சம் எள்ளை நிரப்பி வைக்க வேண்டும். அது சனி பகவானுக்கு உகந்த கருப்பு எள்ளாக இருக்க வேண்டும். பின்னர் ஒரு கருப்பு நிற நூல் கொண்டு இதை நன்கு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். இருக்கமாக முடிந்து கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் எள் வெளியே வந்து விடக் கூடாது. பின்னர் இதை நல்லெண்ணெயில் நன்கு முக்கிக் கொள்ளுங்கள். பின்னர் விளக்கில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இது போல எட்டு விளக்குகளிலும் 8 பொட்டலங்கள் செய்து வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் காலபைரவர் சன்னதியில் செய்யப் போகிறீர்கள். சனி பகவானுக்கு குருவாக காலபைரவர் விளக்குகிறார். எனவே சனி பகவான் தரும் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கு அவருடைய குருவாகிய கால பைரவருக்கு இப்படி விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்வதாக ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலபைரவர் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்குள்ள சன்னிதியில் 8 தீபங்களை இப்படி சுடர் விட்டு எரியுமாறு வைக்க வேண்டும்.

தீபங்கள் அனைத்தும் காலபைரவரை நோக்கி இருக்க வேண்டும். இதுபோல 16 சனிக்கிழமைகளில் நீங்கள் கால பைரவருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து, உங்களுடைய வாழ்க்கையில் சனிபகவானால் நிறையவே நன்மைகள் நடக்கும். ‘சனியை போல கெடுப்பாறும் இல்லை, கொடுப்பாறும் இல்லை’ என்கிற பழமொழி உண்டு. அது போல உங்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை அவர் வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

- Advertisement -