பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு

kala bhairavar dheepam
- Advertisement -

அஷ்ட பைரவர்களில் நாம் அதிகமாக வழிபாடு செய்வது கால பைரவரை தான் ஏனெனில் மனிதன் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சனைகளையும், கண்ணுக்கு தெரிந்த தெரியாத எதிர்களையும் தினந்தோறும் எதிர் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து அவர்களை விடுவித்து நல்ல முறையில் வாழ வைக்க கூடிய ஆற்றலை தருபவர் இந்த கால பைரவர்.

சிவனின் சொரூபமாக பார்க்கக் கூடிய இந்த கால பைரவரை நம்முடைய பிரச்சனைகள் தீர நம் வீட்டிலேயே எப்படி எளிமையாக வழிபடுவது என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கஷ்டங்கள் எதிரி தொல்லை நீங்க காலபைரவர் வழிபாடு
நாளைய தினம் பங்குனி மாதத்தில் வரக் கூடிய வளர்பிறை அஷ்டமி. பங்குனி மாதம் முழுவதுமே வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் வரக் கூடிய அஷ்டமியும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம். அத்தகைய நாளில் நம்முடைய பிரச்சனைகள் தீர பைரவரை வீட்டில் எளிமையாக இந்த முறையில் எளிமையாக வழிபாடு செய்யலாம்.

இந்த வழிபாடு செய்வதற்கு நாளைய தினம் பிரம்ம முகூர்த்த வேளையிலே எடுத்து குளித்து முடித்து முதலில் பூஜை அறையில் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள் இந்த வழிபாடை நாளை நான்கு நேரத்தில் செய்யலாம்.

- Advertisement -

காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அடுத்ததாக காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை செய்யலாம். அதன் பிறகு 10.30 மணியிலிருந்து 11:30 வரை செய்யலாம். இந்த நேரங்களை தவறவிட்டால் மாலை 5.30மணியி லிருந்து 7.30 மணிக்குள்ளாக செய்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்வதற்கு வீட்டில் பைரவர் திருவுருவப்படம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிவபெருமான் படம், சிவலிங்கம், பானலிங்கம் என இருந்தாலும் அவற்றை வைத்து வணங்கலாம். எந்த படங்களும் இல்லாத பட்சத்தில் பைரவரை நினைத்து தீபம் ஏற்றினாலே போதும்.

- Advertisement -

நாளைய தினத்தில் பைரவருக்கு சிகப்பு நிறத்தினால் ஆன பூக்களை சூட்ட வேண்டும் நெய்வேத்தியமாக உப்பு சேர்க்காத தயிர் சாதம் செய்ய வேண்டும் அதை அத்துடன் ஏதேனும் ஒரு இனிப்பை செய்து கொள்ளுங்கள். வெற்றிலை, பழம், பாக்கு, ஊதுபத்தி போன்ற பூஜைக்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்து விடுங்கள்.

இப்போது பைரவரை நினைத்து ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி எரிய வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து விடுங்கள் அதேபோல் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். நீங்கள் வடக்கு புறமாக அமர்ந்து கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் ஐம் கால பைரவாய நமக
என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த வழிபாடு செய்யும் போது உங்களுடைய மனக்குறைகள் எதிரி தொல்லைகள் என எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அது தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள்.

இந்த வழிபாடு செய்வதோடு நாளைய தினம் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று கால பைரவரை தரிசனம் செய்யுங்கள். இது நாளைய வழிபாட்டிற்குரிய பலனை அதிக அளவில் உங்களுக்குப் பெற்றுத் தரும். இந்த மந்திர வழிபாட்டை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யும் போது இன்னும் அதிக பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: கிரக தோஷம் நீங்க பரிகாரம்

காலத்தையே அடங்கும் சக்தி படைத்த கால பைரவரை நாளைய தினத்தில் இந்த முறையில் வணங்கும் போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நல்ல முறையில் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையினை நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்

- Advertisement -