கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்க அம்பாள் வழிபாடு

amman1
- Advertisement -

மனது பலவீனமாக இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் பயங்கள் எல்லாம் வரும். எதிர்மறை ஆற்றல் இருக்கிறதா. இதனால் நமக்கு பாதிப்பு வருமா என்ற விவாதத்திற்கு எல்லாம் நாம் செல்ல வேண்டாம். உங்களுக்கு இப்படிப்பட்ட பேய் பிசாசு தொல்லை, ஆவி தொல்லை, செய்வினை தொல்லை ஏதாவது இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால் இதற்காக மாந்திரீகம் தாந்திரீகம் என்று சென்று நிறைய செலவு செய்ய வேண்டாம்.

தினமும் அம்பாளை உங்களுடைய வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள். உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நம்மை எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்காமல் இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உக்கிர தெய்வங்கள் என்றதுமே பயந்து விட வேண்டாம். உக்கிர தெய்வங்களை சாத்வீக குணத்துடன் கும்பிடுவது எந்த தவறும் இல்லை.

- Advertisement -

உக்கிர தெய்வங்களுக்கு நிஜமாகவே குழந்தை மனசு. கேட்ட வரங்களை உடனே கொடுக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்கும் நோக்கத்தோடு நீங்கள் இந்த உக்கிர தெய்வங்களை ஒருபோதும் நெருங்க கூடாது. மனசுத்தோடு தான் இந்த வழிபாட்டை செய்யணும். சரி எனக்கு இதன் மீது நம்பிக்கை இருக்கிறது.

அதாவது ஏவல் பிள்ளை சூனியம் இதெல்லாம் இந்த பூமியில் உலாவுவது உண்மைதான். பேய் பிசாசு பிடித்துக் கொள்ளும் இதிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்யணும். இப்படிப்பட்ட எதிர்மறையாற்றலால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நீங்கள் இதை செய்யலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு இந்த பரிகாரத்தைச் சொல்லி செய்ய சொல்லலாம்.

- Advertisement -

கெட்ட சக்தி இடம் இருந்து விலக காளி வழிபாடு

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். காளி, அங்காள பரமேஸ்வரி, வாராஹி இப்படிப்பட்ட திருவுருவப்படங்களை வீட்டில் வைக்க நிச்சயம் அனுமதி கொடுக்க மாட்டாங்க. ஆகவே மனதார உக்கிர தெய்வங்களை நினைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். அந்த தீபச்சுடர் ஒளி தான் காளி.

அங்காள ஈஸ்வரி, வாராஹிதாய் என்று நினைத்துக் கொள்ளுங்கள். காளிக்கு பிரசாதமாக ஒரு பீடா வைக்கலாம். இது வித்தியாசமான பரிகாரமாக இருக்கலாம் ஆனால் காளிக்கு பீடா வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. பிறகு கற்பூரத்தில் ஒரே ஒரு கிராம்பு போட்டு, காளியை மனதில் நினைத்து பூஜை அறைக்க ஆராத்தி காண்பியுங்கள். உங்களுக்கு அந்த பராசக்தி, அந்த காளியின் அனுக்கிரகம் கிடைக்க தொடங்கிவிடும்.

- Advertisement -

தினமும் தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு காளியின் அருள் ஆசி கிடைத்துவிடும். பிறகு உங்களை எந்த கெட்ட சக்தியாலும் நெருங்கவே முடியாது. ரொம்ப மன பயத்தோடு இருப்பவர்கள் எதை எதையோ பார்த்து பயந்து போய் சித்த பிரம்மை பிடித்தது போல இருப்பவர்களுக்கும் இந்த வழிபாடு ஒரு நல்லதொரு தீர்வை காட்டும்.

சாதாரண மனிதர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாமா என்ற சந்தேகமே உங்களுக்கு தேவை இல்லை. காளியும் ஒரு தாய் தான். காளியும் ஒரு நல்ல சக்தி தான். அடுத்தவர்களை கெடுப்பதற்காக காலியை வழிபாடு செய்யக்கூடாது. காலியிடம் தினமும் தொடர்ந்து நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது அப்படியே கிடைக்கும்.

உண்மையான பக்தியோடு வேண்டினால். உங்களை எந்த கெட்ட சக்தியும் நெருங்கக் கூடாது என்று வேண்டுதல் வைத்து பாருங்கள். ஒரு ஈ எறும்பு கூட உங்களை அண்ட விடாமல் அந்த காளிதேவி பார்த்துக் கொள்வார். காளிக்கு பிரசாதமாக வைக்கும் பீடாவை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். உங்கள் வீட்டில் யாரும் இதை சாப்பிட மாட்டார்கள், நீங்களும் சாப்பிட மாட்டீங்க அப்படி என்றால் கொண்டு போய் ஆடு மாடு இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சகல தோஷங்களும் விலக சனிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் முறை

48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு காளியின் அருளாசி கிடைக்கும். உங்கள் உடம்பை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றலும் விலகும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -