ராகு தோஷம் நீங்க காளியம்மன் வழிபாடு

kaliamman raghu
- Advertisement -

நிழல் கிரகங்களாக திகழக்கூடியவர்கள் தான் ராகுவும், கேதுவும். இதில் ராகுவால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்தவித நல்ல பலன்களும் தங்கள் வாழ்வில் நடைபெறாது. குறிப்பாக தொழில் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமணத்தடை உண்டாகும். இன்னும் சிலருக்கு அவர்கள் ஜாதகத்திலேயே ராகு தோஷம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. ராகு திசை நடப்பவர்களாக இருந்தாலும், ராகு புத்தி நடப்பவர்களாக இருந்தாலும் அவரின் தாக்கத்திலிருந்து வெளியில் வருவதற்கு எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க தெய்வமாக திகழக்கூடியவர்தான் அம்மன். ஒரு குழந்தைக்கு தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் தாயாக திகழக் கூடியவர் தான் அம்மன். அம்மன் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் அதில் குறிப்பாக நாம் காளியம்மனை உக்கிர தெய்வமாகவும் அதே சமயம் சார்ந்த ரூபமாகவும் வழிபட முடியும். அப்படிப்பட்ட காளியம்மனை ராகு தோஷம் நீங்க எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இரன்று அகல்களை வைத்து அதில் சுத்தமான வேப்பெண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மந்தாரை பூக்கள் கிடைக்கும் பட்சத்தில் அதை வாங்கி காளி அம்மனுக்கு சாற்றலாம். இயலாதவர்கள் தங்களால் இயன்ற பூக்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

பிறகு உளுந்தினால் செய்யப்பட்ட வடை அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருட்களை காளியம்மனுக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக வழங்க வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 8 வாரங்கள் வழிபாடு செய்து வர ராக தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

மேலும் ராகு தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடைகள் அனைத்தும் நீங்கவும் விரைவிலேயே திருமணம் நடைபெறவும் இந்த வழிபாடு மிகவும் உறுதுணையாக திகழும். கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களையும் நீக்குவதற்கு உதவி புரியும். ராகுவை போல் கொடுப்போரும் இல்லை என்ற மொழிக்கு ஏற்றவாறு நன்மைகள் அனைத்தையும் வாரி வழங்குவார் ராகு பகவான்.

தொழில் ரீதியாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் நீங்கவும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். தொழில் ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் காளியம்மனையும் இயலாதவர்கள் துர்க்கை அம்மனையும் வழிபட அவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த காளியம்மன் வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய ராகு தோஷம் என்பது படிப்படியாக நீங்கி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -