கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்

sivan
- Advertisement -

நம்முடைய புராணத்தில் நான்கு யுகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம். இந்த நான்கு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம். நமக்கு முன்னால், அதாவது கடந்து வந்த மூன்று யுகத்திலும் கடவுளை காண்பதற்கு தவம் இருந்தார்கள். முள் மேல் கத்தி மேல் தவமிருந்தார்கள்.

தலைகீழாக நடந்து சென்று கூட இறைவனை வழிபாடு செய்திருக்கிறார்கள். அதற்கு நம்முடைய காரைக்கால் அம்மையாரை ஒரு உதாரணம். அதுமட்டுமில்லாமல், கடவுளே அவதாரமாக எடுத்து வந்து கூட பூமியில் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான புராண கதைகளும் உண்டு அதற்கான சாட்சிகளும் இன்று பூமியில் இருக்கிறது. ஆனால், இன்று இருப்பதோ கலியுகம்.

- Advertisement -

அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த சூழ்நிலையில் நம்முடைய பிரச்சனைகள் தீர நாம் கடவுளை நெருங்கி செல்ல என்ன பரிகாரம் செய்வது. தவம் இருப்பதோ மெல்மேல் நடப்பதோ முடியாதே. ஆன்மீகம் சொல்லும் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கஷ்டத்திற்கான தீர்வை இறைவன் எளிமையாக கொடுத்திருக்கின்றான்.

கஷ்டங்கள் தீர எளிமையான பரிகாரம்

கஷ்டங்கள் வரும்போது மனசு சரியில்லாத சமயத்தில் சில பேயரால் எதையுமே சரியாக சிந்திக்க முடியாது. அப்படி இருக்கும் போது அவர்களால் நிச்சயமாக பரிகாரங்கள் செய்ய முடியாது. பரிகாரங்கள் என்றாலே பெரிய பெரிய ஜோதிடர்களை பார்க்க வேண்டும் ஜாதகம் பார்க்க வேண்டும், நிறைய பொருட்களை வாங்கி கொடுத்து யாகம் வளர்த்த வேண்டும் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் உண்மையான பரிகாரம் என்ன தெரியுமா. கோவில்களுக்கு செல்வது தான். பிரச்சனைகளை கடவுளின் பாதங்களில் இறக்கி வையுங்கள். இதுதான் முதல் பெரிய பரிகாரம். இரண்டாவதாக, எவ்வளவோ கஷ்டம் இருக்கிறது. ஆனால் கோவிலுக்கும் போக முடியவில்லை. என்ன செய்வது. வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘சிவ சிவ, ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தை சொல்லி உங்கள் பிரச்சனைகளை கடவுளிடம் சொன்னால், அந்த பிரச்சனை உடனடியாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மனதுக்குள் சிவ சிவ மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கரைந்து போகும் என்று திருமூலர், திருமந்திர நூலில் சொல்லி வைத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அதை எல்லாம் நாம் செவி கொடுத்து கேட்கவே மாட்டோம். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி யாகங்கள் ஹோமங்கள் செய்தால் தான் நல்லது நடக்கும் என்று சில ஜோதிடர்கள் சொல்லுவதை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றோம். எல்லோரையும் குறை சொல்லவில்லை. இருந்தாலும் பணம் பறிக்கும் ஆசாமிகளை நம்பி சென்று ஏமாந்து விடாதீர்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

வீட்டிலிருந்தபடியே மன சுத்தத்தோடு அமர்ந்து உங்களுக்கு பிடித்த இறைவனின் நாமத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருங்கள். அப்படி இருக்கும்போது உங்களுடைய பிரச்சனைகள் எப்படித்தான் காணாமல் போனது என்றே உங்களுக்கு தெரியாது ஓம் நமசிவாய, சிவ சிவ, மந்திரத்தை தாண்டி முருகா, ராமா, பெருமாளே, நாராயணா என்று உங்களுக்குப் பிடித்த தெய்வத்தை கூப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம்

பிடித்த அம்பாள் பெயரைச் சொல்லுங்கள். இறைவனின் நாமத்தை சொல்லச் சொல்ல உங்கள் வாழ்க்கை செழிப்பாகும். கஷ்டங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக அழியும் என்பதுதான் நம்பிக்கை. உலகத்திலேயே இருக்கக்கூடிய பரிகாரங்களில் சிறந்த பரிகாரம் இறைவனிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லி, இறைவனின் நாமத்தை சொல்லுவது ஒன்று மட்டும் தான் என்பதை உறுதியோடு சொல்லி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -