நீங்கள் நினைக்கும் கல்வி, உயர் பதவி இவையெல்லாம் உங்களுக்கு தானாக அமைய இந்த வழிபாடு வழி செய்யும். புதன் அருளை பெற்று படிப்பு, பதவி என வாழ்க்கையில் உயர எளிய வழிபாடு.

puthanarul pera
- Advertisement -

இந்த காலத்தில் பணத்திற்கு தரக்கூடிய முக்கிய பங்கை அதற்கு இணையாக கல்விக்கும் நாம் தருகிறோம். கல்வி என்ற ஒன்று நமக்கு சரியாக கிடைத்து விட்டால், வாழ்க்கையில் பல வெற்றிகளை நம்மால் அடைய முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட கல்வி நமக்கு நல்ல முறையில் கிடைக்க கல்விக்கு அதிபதியான புதன் கிரகத்தை எவ்வாறு வழிபடுவது என்று தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சுப கிரகங்களில் முக்கியமாக கருதப்படுபவர் புதபகவான். இவர் கல்விகளுக்கும், உயர் பதவிகளுக்கும், செல்வ செழிப்பிற்கும் வழி காட்டுபவர். அப்படிப்பட்ட புதன் பகவானை புதன்கிழமை தோறும் இவ்வாறு வழிபடுவதால் நமக்கு கல்வி, உயர்பதவி போன்ற அனைத்து நன்மைகளும் நடைபெறும். புதன்கிழமை என்பது புதன் கிரகத்திற்குரிய கிழமையாக இருந்தாலும், இந்த புதன் கிழமை பெருமாளுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் வரும் புதன்கிழமை அன்று நாம் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கல்வி உயர் பதவி கிடைக்க வழிபாடு
புதன்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, நீராடி, வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பெருமாளின் புகைப்படத்தை சுத்தம் செய்து, அவருக்கு சந்தனம், குங்குமம் இட்டு பல வகையான வாசனை மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் தாமரை மாக்கோலம் இட்டு அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும். அதாவது எவர் சில்வரை தவிர்த்து செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற உலோகத்தில் ஆன செம்பை வைத்து அதில் பாதி அளவு சுத்தமான நீரை ஊற்றி அதனுள் பச்சை கற்பூரம், ஏலக்காய், துளசி போன்றவற்றை போட்டு மாவிலை தோரணம் வைத்து, அதன் நடுவில் மஞ்சள் தடவி குங்குமம் இட்ட தேங்காயை வைக்க வேண்டும். மேலும் அந்த கலசத்திற்கு பச்சை நிற துணியை அணிவிக்க வேண்டும்.

அன்று நெய்வேத்தியமாக இனிப்பு பச்சை பயிரை வைக்க வேண்டும். பிறகு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, அவருக்கு துளசி மாலை சாற்றி, அவரை ஐந்து முறை வலம் வந்து, நம்முடைய பிரார்த்தனையை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் விளக்கேற்றி பெருமாளுக்கு உரிய பாடல்களை பாடலாம் அல்லது புதன் பகவானிக்குரிய நாமங்களை உச்சரிக்கலாம். இவ்வாறு செய்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டு, நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சமையலறையில் எப்போதுமே இல்லை என்று சொல்லாத அளவிற்கு பொருட்கள் நிறைவாக இருக்க, இதை மட்டும் செய்தாலே போதும். அன்னபூரணி தாயாரின் அனுகிரகம் பெற்று உங்க சந்ததியே வறுமை நிலையிலிருந்து தப்பித்து விடும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து 21 புதன் கிழமை விரதத்தை மேற்கொள்ளும் பொழுது, புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து கல்வியில் நாம் சிறந்து விளங்குவோம். மேலும் கல்வியால் நமக்கு உயர் பதவிகள் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பெருமாளின் அனுகிரகத்தால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வ செழிப்புகள் கைகூடும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு இணங்க புதன்கிழமை விரதம் இருந்து பொன்னையும் பொருளையும் அதை விட மேலான அறிவு செல்வத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -