கல்யாண வீடு என்றால் அங்கு வத்த குழம்பு இல்லாமல் இருக்காது. கல்யாண வீட்டின் அதே சுவையில் உங்க வீட்டிலும் வத்த குழம்பு செய்து சுவைத்து பாருங்கள்

vaththa
- Advertisement -

வத்த குழம்பு  சுவையான குழம்பு வகை.  வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு, சுண்டைக்காய் வத்தல்,  பாவக்காய் வத்தல்,  மணத்தக்காளி வத்தல்,  மாங்காய் வத்தல்,  கத்தரிக்காய் வத்தல்   போன்றவற்றை பயன்படுத்தி வத்த குழம்பு செய்யலாம்.   வத்தல் என்பது என்பது விருப்பமான காய்கறியை உப்புக் கலந்த மோரில் ஊறவைத்து 4 – 5 நாட்களுக்கு வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். அதனை சுத்தமான டப்பாவில் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சேமித்து வைக்கலாம்.  காய்கறிகளை இதுபோன்று வத்தல் செய்து குழம்பில் சேர்க்கும் பொழுது அதன் சுவை வித்தியாசமாகவும் அபாரமாகவும் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வத்த குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் – 1/4  கப்,  நல்லெண்ணெய் – 50 கிராம், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2  ஸ்பூன், கடுகு – 1/2  ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு, வெள்ளைப் பூண்டு – 50 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 2, உப்பு –  1ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன், மல்லித்தூள் – 2  ஸ்பூன், மிளகாய் தூள் – 2  ஸ்பூன், சீரகத்தூள் – 1/2  ஸ்பூன், புளி –  சிறிய எலுமிச்சை பழ அளவு, வெல்லம் –  சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
சுண்டக்காய் வத்தலை சூடான தண்ணீரில் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.ஒரு கடாயில் 50ml நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 1/4 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் சீரகம், மற்றும் 1/2  ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ளவும்.கடுகு, சீரகம் பொரிந்த பின்னர் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் 50g கிராம் வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும்.பூண்டு ஓரளவு வதங்கிய பின்னர் 100g சின்னவெங்காயம் சேர்த்து மென்மையாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் வதங்கியதும் 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.  அதனுடன் ¼  தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மல்லி தூள், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் ½  தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் ஊற வைத்துள்ள சுண்டைக் காய்களை  தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.மீண்டும் மூடி வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும் அவ்வப்போது கிளறி விடவும்.குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானதும் சிறிதளவு வெல்லம் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வைக்கவும்.சுவையான வத்தக் குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -