கண் திருஷ்டி, மனபயம் நீங்க பரிகாரம்

nilaivasal pariharam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று அவருக்கு தடைகளுக்கு மேல் தடைகள் வந்து கொண்டே இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். இதே போல் தேவையற்ற வீண் பயம் மனதில் ஏற்பட்டு எந்த செயலையும் தைரியமாக செய்து முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வருவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. மிகவும் எளிமையான பரிகாரங்களும் இருக்கிறது. கண் திருஷ்டியை நீக்குவதற்கு கண் திருஷ்டி விநாயகரின் படத்தை வாசலில் மாட்டி வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் விநாயகப் பெருமானை நினைத்து ஒரு மந்திரத்தை கூறி ஒரு பரிகாரத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் தீய சக்திகள் எதுவும் வீட்டிற்குள் அண்டவே அண்டாது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு பச்சை நிற துணி ஒன்று தேவைப்படும். பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது வன்னி குச்சியையும், சிறிது கருங்காலி குச்சியையும் வைக்க வேண்டும். அந்த குச்சிகளுக்கு மேல் ஒரு கொப்பரை தேங்காய் வைத்து பச்சை துணியால் மூடி கருப்பு நிற நூலை வைத்து நன்றாக சுத்தி மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

மீதம் இருக்கும் பச்சை நிற துணியில் கொப்பரை தேங்காய் ஒரு சிறிய பரிகாரத்தை வைத்து மறுபடியும் பச்சை நிற துணியை மூடிக்கொண்டு அதற்கு மேலும் கருப்பு நிற நூலால் நன்றாக கட்டி முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். மறுபடியும் படிகாரத்திற்கு மேல் ஒரு எலுமிச்சம் பழத்தை அதே துணியில் வைத்து நன்றாக சிவப்பு நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த பச்சை நிற துணி மூன்று பாகங்களாக பிரிந்து இருக்கும். இந்த பச்சை நிற துணியை நம் வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டி விட வேண்டும். பிறகு கொப்பரை தேங்காய்க்கும், படிகாரத்திற்கும், எலுமிச்சம் பழத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு விநாயகருக்குரிய மந்திரமான “ருண ரோக சத்ரு நிவாரண அனுக்கிரக கணபதயே வர வரத சர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை கூறி தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.

மாதத்திற்கு ஒருமுறை எலுமிச்சம் பழத்தை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். வருடத்திற்கு ஒருமுறை இடிவிற்கும் அனைத்து பொருட்களையும் கால்படாத ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் தூபம் போடும் பொழுது இந்த மூட்டைக்கும் தூப தீபம் காட்ட வேண்டும். அப்படி தூப தீபம் காட்டும் பொழுது மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும். எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாமல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். மன பயம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் குழந்தை, வாழ்க்கையில் எப்போதுமே வெற்றியை பெற பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து கண் திருஷ்டிகளையும் மன பயத்தையும் அடியோடு விரட்டி அடிக்கலாம்.

- Advertisement -