உங்கள் குழந்தை, வாழ்க்கையில் எப்போதுமே வெற்றியை பெற பரிகாரம்

mahalashmi6
- Advertisement -

பெற்றவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் எப்போதும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிள்ளைகள் தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது மட்டுமல்லாமல் நன்றாக படிக்க வேண்டும், திறமையாக எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும், என்ற ஆசையும் பெற்றவர்களுக்கு இருக்கிறது.

வெறும் ஆசை மட்டும் பெற்றவர்களுக்கு இருந்தால் போதாது. பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய கடமையும் பெற்றவர்களிடத்தில் இருக்கிறது. அதேசமயம் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் அந்த இறைவனிடத்தில் பிரார்த்தனையும் செய்து கொள்ள வேண்டும். அந்த இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும் பட்சத்தில் தான் நம்முடைய பிள்ளைகளின் சந்தோஷம் நிறைவாக இருக்கும். சரி, நம் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்வதற்கு பெற்றவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் என்னென்ன. தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

பிள்ளைகள் எதிலும் ஜெயிக்க வழிபாடு

எதுவாக இருந்தாலும் முதலில் முழு முதல் கடவுள் பிள்ளையார் தானே முக்கியம். பிள்ளையார் வழிபாடு பற்றி பார்த்து விடுவோம். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்க வேண்டும். செவ்வாய் கிழமையை தொடர்ந்து, அடுத்த திங்கட்கிழமை வரை மொத்தமும் ஏழு நாட்கள், இடைவிடாது இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தையின் அம்மா இந்த வழிபாட்டை செய்யலாம். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக குங்குமம் எடுத்துக்கோங்க. வாசம் நிறைந்த குங்குமத்தில் பன்னீரோ அல்லது தண்ணீரோ விட்டு கலந்து இதில் பிள்ளையார் பிடிக்க வேண்டும்.

- Advertisement -

மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போலே குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து, ஒரு வெற்றிலையின் மீது வைத்து அதற்கு அருகம்புல் வைத்து, பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் மாலை 6 மணிக்கு முன்பாக இந்த பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து, கால் படாத இடத்தில் ஊற்றவும். செடி கொடிகளுக்கு கீழே ஊற்றினாலும் தவறு கிடையாது.

ஏழு நாள் தொடர்ந்து இதே குங்குமப் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்து, தினமும் அந்த பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து வரவேண்டும். வழிபாடு செய்யும்போது உங்களுடைய பிள்ளை, உங்க கூட இருக்கலாம். தவறு கிடையாது.

- Advertisement -

இந்த குங்கும பிள்ளையாரிடம், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், திறமைசாலிகளாக வளர வேண்டும், வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி காண வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பெருசாக எந்த ஒரு தடையும் வராது. இது முதல் பரிகாரம். இதை செஞ்சுக்கோங்க.

அதற்கு பிறகு மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் என்றைக்கு வருது அப்படின்னு பார்த்து வச்சுக்கோங்க. பூரம் நட்சத்திரம் அன்று மகாலட்சுமிக்கு அரளி பூ மாலை சாத்த வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு நீங்கள் இந்த அரளி பூவை மாலையாக கட்டி போடலாம். இந்த பரிகாரத்தை செய்து வந்தீர்கள் என்றால், உங்கள் குழந்தைகள் எப்போதும் சோம்பேறித்தனத்தோடு இருக்க மாட்டாங்க.

இதையும் படிக்கலாமே: சதுர் கிரக யோகம்

புத்துணர்ச்சியோடு ஏதாவது ஒரு புது விஷயத்தை கத்துக்கணும் என்று ஆர்வத்தோடு இருப்பாங்க. வாழ்க்கையில் வெற்றியும் அடைவார்கள். ஆன்மீகம் சார்ந்த இரண்டு விஷயங்களும் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -