இந்த ஒரு பொருளை காற்றில் தூவி விட்டால் போதும். கடுமையான கண் திருஷ்டியும் நம்மை விட்டு அகன்றுவிடும்

dhirushti
- Advertisement -

வாழ்க்கை இனிமையாக தான் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில சமயங்களில், எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியம் சீர்குலையும், வேலையில் பிரச்சனை ஏற்படும், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும் இதுபோன்று அடுத்தடுத்த பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் கூட திடீரென்று சோம்பேறியாய் மாறிவிடுவார்கள். தங்களுக்கே தான் சோர்வாக இருப்பதற்கான காரணம் தெரியாது. இவை அனைத்தும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளால் நிகழ்பவையாகும். எதிர்மறை சக்திகள் என்பது மற்றவர்கள் நம்மீது வைக்கும் பொறாமை பார்வையாகும். ஒருவர் மற்றவரை பார்த்து பெருமையாகவோ அல்லது பொறாமையாகவோ எப்படி இவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்? இவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? என்று கூறும் பொழுது அவர்கள் வாயிலிருந்து வரும் இது போன்ற வார்த்தைகள் காரணமாகவே எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. இதன் தாக்கத்தினால் வீட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவ்வாறான கண் திருஷ்டிகளை எளிதில் அகற்ற இந்த ஒரு பொருள் போதும். வாருங்கள் அது என்ன பொருள் அதனை வைத்து எவ்வாறு கண்ததிருஷ்டியை அகற்ற வேண்டும் என்பததை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

happy-family

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை வைத்து பல பரிகாரங்கள் செய்திருக்கிறோம் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது வீட்டில் எப்போதும் உப்பை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் வாரம் ஒருமுறை உப்பினை சுவாமி படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்வது வீட்டிற்கு நன்மையை கொடுக்கிறது அவ்வாறு உப்பை வீடு துடைக்கும் பொழுது அந்தத் தண்ணீரில் சேர்த்து வீட்டை சுத்தம் செய்வதும் எதிர் மறை சக்திகளை அழிக்க உதவுகிறது இவ்வாறு கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பின் மூலம் பலவித ஆன்மீக பலன்கள் இருக்கின்றன.

- Advertisement -

அதுபோல இமயமலை மற்றும் நேபாள பகுதியில் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கருப்பு நிற உப்பிற்கு எதிர் மறை அதிர்வுகளை அழிக்க கூடிய ஆன்மிக சக்தி இருக்கிறது. கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பினை போலவே இந்த கருப்பு நிற உப்பிலும் சோடியம் குளோரைடு நிறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளை நிற உப்பை விட கருப்பு நிற உப்பில் சோடியம் குளோரைடு குறைவாக காணப்படுகிறது.

salt

இதனை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்கும் பொழுது உடலில் இருக்கும் வெடிப்புகள் மறைந்து சருமம் மிருதுவாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கருப்பு உப்பிற்க்கு கடினமான கண்திருஷ்டியை அகற்றும் வல்லமை இருக்கிறது. செவ்வாய், வியாழன் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி போடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

- Advertisement -

அப்பொழுது இந்த கருப்பு உப்பை இடது கையில் சிறிதளவு எடுத்துக்கொண்டு, யாருக்கு கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறதோ அவரை வீட்டிற்கு வெளியே கிழக்கு திசை நோக்கி நிற்க வைக்க வேண்டும். பின்னர் சுற்றி போடும் நபர் இடமிருந்து வலமாக ஒன்பது முறை சுற்றி விட்டு சற்று தூரம் சென்று கையில் இருக்கும் உப்பினை ஊதி காற்றில் பறக்கவிட வேண்டும்.

black-salt

இந்த உப்பு எப்படி காற்றில் பறந்து கரைந்து விடுகிறதோ அது போல நமக்கு இருக்கும் கண் திருஷ்டிகள், பிரச்சனைகள் அனைத்தும் அவ்வாறே கரைந்துவிடுகிறது. இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை தவறாமல் செய்து பாருங்கள் கட்டுக்கடங்கா கண் திருஷ்டியையும் இந்தக் கருப்பு கல் உப்பு கண்ணுக்கே தெரியாமல் கரைத்துவிடும்.

- Advertisement -