கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

kan dristri
- Advertisement -

கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். இதை பலரும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்போம். கண் திருஷ்டிக்கு அவ்வளவு பெரிய சக்திகள் இருக்கிறது. பாருப்பா என்று கூறினாலேயே அதனுடைய பாதிப்புகள் என்பது நமக்கு வந்து சேரும். அந்த பாதிப்புகளில் இருந்து நீங்குவதற்கும், கண் திருஷ்டி வராமல் இருப்பதற்கும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

எதிர்மறை சக்திகளில் பல வகைகள் இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு எதிர்மறை சக்தியாக திகழ்வதுதான் கண் திருஷ்டி. கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த கண் திருஷ்டியில் இருந்து வெளியில் வருவதற்குள் ஒருவித போராட்டத்திற்கே ஆளாகி விடுவார்கள். தொழிலில் கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அந்தத் தொழில் மேற்கொண்டு நல்ல முறையில் நடைபெறாது. மேலும் அதில் லாபம் ஏற்படாது, நஷ்டமே ஏற்படும்.

- Advertisement -

இதே ஒரு வீட்டில் புதிதாக ஏதாவது ஒரு பொருள் வாங்கி இருந்தால் அந்த பொருளால் கண் திருஷ்டி ஏற்பட்டால் அந்த பொருள் எந்த வகையிலும் நமக்கு உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் அல்லது அந்த பொருளால் நமக்கு பாதிப்புகள் வந்துவிடும். இப்படி நம்முடைய முன்னேற்றம் ஒவ்வொன்றிற்குமே கண் திருஷ்டி என்பது ஏற்பட செய்யும்.

இப்படி கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் நம்முடைய முன்னேற்றம் தடைபடுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு பல வகைகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முதலாவதாக நம்முடைய வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் ஸ்தாபனத்திலோ கண் திருஷ்டிகள் எதுவும் ஏற்படக் கூடாது என்று நினைப்பவர்கள் ஆகாச கருட கிழங்கை வாங்கி வந்து அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து அது முழுவதும் மஞ்சளை தடவி குங்குமப்பொட்டை வைத்து கருப்பு நிற கயறினால் நிலைவாசலுக்கு வெளியே கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் திருஷ்டிகள் எதுவும் அண்டாமல் இருக்கும்.

இதே போல் நிலை வாசலுக்கு இரண்டு புறமும் நன்றாக பழுத்த எந்தவித கருப்பு புள்ளிகளும் இல்லாத மஞ்சள் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து இரண்டாக நறுக்கி ஒரு பாதியில் மஞ்சளையும் மற்றொரு பாதையில் குங்குமத்தையும் தடவி நிலை வாசலில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வெளிவர முடியும்.

- Advertisement -

மூன்றாவதாக மூன்று வகையான தீர்த்தம் தேவைப்படும். அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குளத்தில் இருந்து தீர்த்தத்தை சேகரித்து வரவேண்டும். சிவன் கோவிலில் உள்ள குளத்தை தேர்வு செய்தால் மூன்று சிவன் கோவில்களில் இருக்கக்கூடிய தீர்த்தத்தை சேகரிக்க வேண்டும். அம்மன் கோவிலாக இருந்தால் மூன்று அம்மன் கோயில் தீர்த்தமாக இருக்க வேண்டும். பெருமாள் கோவிலாக இருந்தால் மூன்று தீர்த்தமும் பெருமாள் கோயில் தீர்த்தமாக இருக்க வேண்டும்.

இப்படி மூன்று தீர்த்தத்தையும் எடுத்து வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த மூன்று தீர்த்தங்களையும் சிறிதளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கலக்க வேண்டும். கலந்த இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகிவிடும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர கால பைரவர் வழிபாடு

மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த கண் திருஷ்டி பரிகாரத்தை நாமும் நம்பிக்கையுடன் செய்து கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து வெளி வருவோம்.

- Advertisement -