இரவில் இதை மட்டும் செய்தால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்களை எளிதாக வீழ்த்தி விடலாம் தெரியுமா?

sivan-viboothi-thiruneeru
- Advertisement -

நம்முடன் இருக்கும் எல்லோரும் நம் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று கூறி விட முடியாது. நம் வளர்ச்சியை கண்டு பூரிப்பவர்கள் என்று சொல்லி விடவும் முடியாது. கூடவே இருந்து கொண்டு குழி பறிப்பவர்கள் தான் இன்று அதிகம் உள்ளனர். இந்த வகையில் நாம் வளர்ச்சியை கண்டு பொறாமைப் படுபவர்களை எப்படி எளிதாக சமாளிப்பது? பொறாமை பார்வை, கண்னேறு, கண் திருஷ்டி போன்றவற்றை நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்வது எப்படி? அதற்கு தினமும் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

திருநீறுக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்று நாம் கேள்விப்பட்டது உண்டு. இந்த திருநீறு தினமும் நெற்றியில் இட்டு கொள்பவர்களுக்கு, எந்த விதமான கண் திருஷ்டிகளும் நெருங்குவதில்லை என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான இந்த திருநீறு தினமும் வீட்டில் உள்ள அனைவரும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். சாம்பல் எனப்படும் இந்த திருநீறு சிவனுக்கு உரியதாகவும் கருதப்படுகிறது. இதனால் சிவமந்திரம் ஜபித்து, திருநீறு இட்டுக் கொள்பவர்களுக்கு சகல தோஷங்களும், செய்வினைகளும் விடுவிப்பதாக நம்பிக்கை உண்டு. நம்மை வீழ்த்த நினைப்பவர்களை வேரோடு அழிக்கக்கூடிய தன்மை இந்த மந்திரத்திற்கு உண்டு.

- Advertisement -

தினமும் இரவில் தூங்கும் பொழுது இதை செய்தால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்கள், நம்மை பார்த்து சபிப்பவர்கள் கூட இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவார்கள். தினமும் இரவு தூங்கும் பொழுது கால்களை அலம்பி விட்டு தூங்க வேண்டும். பாதங்களில் இருந்து தான் தீய சக்திகள் நுழைவதாக ஐதீகம் உண்டு. எனவே தான் எப்பொழுது வெளியில் சென்று வந்தாலும், வீட்டிற்குள் செல்லும் முன்னர் கால்களை கழுவி விட்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அது போல தினமும் நீங்கள் குளித்திருந்தாலும் கூட, ஒரு முறை நன்கு கால்களை அலம்பி விட்டு, பின்னர் பூஜை அறைக்கு செல்ல வேண்டும். பூஜை அறைக்கு சென்று அங்குள்ள திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக எடுத்து பூசாது, நன்கு நிறைய கையில் எடுத்து வெற்றி நிறைய பூசுங்கள். இதனால் நெற்றியில் நீர் கோர்த்து இருந்தாலும், நீர் முழுவதும் இந்த திருநீறு ஈர்த்து மன நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

- Advertisement -

திருநீறை நெற்றியில் இட்டுக் கொண்ட பின்பு ஒரு நோட்டு புத்தகம் ஒன்று எடுங்கள். அதில் 108 தடவை ‘ஓம் நமசிவாய’ என்கிற இந்த பஞ்சாட்சர மந்திரத்தை எழுதுங்கள். மனதில் உங்களுடைய சிவன் அல்லது இஷ்ட தெய்வம் யாரை நினைத்தாலும், ஓம் நமச்சிவாய என்கிற மந்திரத்தை 108 முறை உச்சரித்துக் கொண்டே எழுதிய பின்பு புத்தகத்தை பூஜை அறையில் வைத்து விட்டு தூங்க செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் வெற்றி பெற, இந்த பூஜை செய்தாலே போதும். கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் கிடைக்கும்.

இவ்வாறு தொடர்ந்து கொஞ்ச நாட்கள் செய்து பாருங்கள். நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் எல்லாம் நிகழும். காலை அலம்பி விட்டு தூங்குவதால் தீய சக்திகள் நம்மை நெருங்காது, எதிர்மறை ஆற்றல்கள் இதனால் நம்மை பின்தொடராது தடுக்கலாம். அதே போல நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வதாலும், 108 முறை இந்த மந்திரத்தை எழுதுவதாலும் மனம் ஒருமைப்பட்டு, தெய்வீக சக்தியால் நிம்மதியான தூக்கமும் கிடைக்கிறது. இப்படி நாம் செய்வதால் நம்மை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களுடைய எண்ணங்கள் முறியடிக்கப்படுகின்றன. நாம் மேலும் மேலும் வளர இது உதவி செய்யும்.

- Advertisement -