கண் திருஷ்டி நீங்க தண்ணீர் பரிகாரம்

kan thirusti
- Advertisement -

உலகத்தில் மோசமான ஒன்று எனில் அது பிறர் நம் மீது வைக்கும் பொறாமை பார்வையும் தீய எண்ணங்களும் தான். ஆகையால் தான் நம் முன்னோர்கள் கல்லடியிலிருந்து கூட தப்பித்து விடலாம் கண்ணாடியில் இருந்து தப்பிக்க முடியாது என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள் இது முற்றிலும் அவர்கள் அனுபவபூர்வமாக அனுபவித்த உண்மை. ஒரு மனிதன் வாழ்க்கையை நிலை குலைய செய்வதில் கண் திருஷ்டி முக்கியமான ஒன்று.

ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அதை பொறுத்துக் கொள்ளாத சில தேவை அற்ற தீய செயல்களை சிலர் செய்கிறார்கள். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து போவதை நாம் பார்க்கத் தான் செய்கிறோம். இப்படியான தீய சக்திகள் எதுவும் நம்மை நெருங்காமல் இருக்க அற்புதமான ஒரு பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கண் திருஷ்டி தீய சக்திகள் இருந்து தப்பிக்க

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் செய்ய வேண்டும். தீயவற்றை அழிக்க நாம் செய்யக் கூடிய பரிகாரங்களை இந்த நேரத்தில் செய்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு தேவையான இந்த பொருளை மட்டும் நீங்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காது கொண்டு வர வேண்டும்.

இதற்கு ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையிலே உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குளம் உள்ள மூன்று ஆலயத்தின் தண்ணீர் வேண்டும். அதாவது முதலில் சிவன் ஆலயத்தில் உள்ள தண்ணீரை எடுத்தீர்கள் என்றால் அதே போல இரண்டு சிவ ஆலயத்திலும் தண்ணீர் எடுக்க வேண்டும். அதாவது மூன்று சிவன் ஆலயத்தில் உள்ள தண்ணீரை எடுக்க வேண்டும்.

- Advertisement -

சிவன் கோவிலில் இருக்கும் குளத்தின் தண்ணீர் கிடைத்தால் நல்லது அல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டின் அருகில் வேறு ஏதேனும் ஆலயம் இருந்தால் இதைப் போல எடுங்கள். ஆனால் வேறு எந்த தெய்வத்தின் ஆலயத்தில் முதல் தண்ணீரை எடுக்கிறீர்களோ, அதே தெய்வத்தின் இரண்டு ஆலய தண்ணீரை தான் எடுக்க வேண்டும். இதை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை கொண்டு வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மூன்று தண்ணீரிலும் கொஞ்சமாக எடுத்து ஒன்றாக கலந்து உங்கள் வீட்டைச் சுற்றி நன்றாக தெளித்து விடுங்கள். வியாபாரம் தொழில் செய்பவர்கள் தங்களுடைய வியாபார ஸ்தலத்திலும் இதே போல தெளித்து விடலாம். வியாபாரங்கள் சிறப்பாக நடக்கும்.

- Advertisement -

இந்த தண்ணீர் கலந்தது போக மீதம் இருந்தால் அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள் அடுத்த வாரம் இதே போல் தண்ணீர் கலந்து தெளித்து விடுங்கள் இதுபோல உங்களால் எத்தனை வாரங்கள் செய்ய முடியுமோ அத்தனை வாரங்கள் செய்யுங்கள் மிகவும் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் இதை செய்வதை ஒரு வழக்கமாக கொண்டால் உங்கள் குடும்பத்திற்கு எந்த காலத்திலும் எந்த தீங்கும் நெருங்காது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிக அளவில் சேர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதால் அன்றைய தினம் அசைவம் சாப்பிடக்கூடாதா என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லை சாப்பிடலாம். நீங்கள் ஆலயத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டு வரும் வரை சாப்பிடாதீர்கள் அதன் பிறகு சாப்பிடுங்கள். வீட்டில் இருக்கும் தீய சக்தி கண் திருஷ்டி போன்றவற்றை போக்க செய்யப்படும் இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறலாம்.

- Advertisement -