தங்கம் அதிக அளவில் சேர பரிகாரம்

gold swastik
- Advertisement -

தங்க நகை வாங்குவது என்பது ஆசைக்காக மட்டுமல்ல. அதுவும் ஒருவிதமான முதலீடு தான். அப்படி நாம் தங்கத்தில் முதலீடு செய்யும் பொழுது நம்முடைய கஷ்ட நேரத்தில் அது உதவி செய்யும் என்பதால் தான் இன்றைய காலத்திலும் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யப்படுகிறது. இருப்பினும் பலரால் அந்த தங்கத்தை தங்கள் வீட்டில் சேமித்து வைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் எந்த வழிமுறையை பின்பற்றி தங்கத்தை வாங்கி வைத்தால் தங்கம் பல மடங்கு சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

பொதுவாக தங்கம் என்பது சூரியனின் அம்சமாக திகழக்கூடியது. மேலும் இதன் நிறத்தை வைத்து புதன் மற்றும் குரு பகவானுக்குரிய உலோகமாகவும் இதை நாம் கருதலாம். வசதி வாய்ப்புடன் திகழக்கூடியவர்கள் தான் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என்பதால் சுக்கிரனுக்கும் இதில் பங்கு இருக்கிறது. அதனால் தான் தங்கத்தை நாம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று நாட்களில் வாங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல் குளிகை நேரத்தில் வாங்கினால் அதிக அளவில் திரும்பத் திரும்ப நகைகளை நம்மால் வாங்க முடியும் என்ற ஒரு ஐதீகமும் இருக்கிறது.

- Advertisement -

சரி இப்படி வாங்கிய நகைகள் என்றுமே நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் அதிக அளவில் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்க நகைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டுவந்து சில வழிமுறைகளை செய்ய வேண்டும். அந்த வழிமுறைகளை பற்றி பார்ப்போம். இதற்கு புதிதாக ஒரு மண்சட்டி தேவைப்படும். அந்த மண்சட்டியில் பாதி அளவிற்கு புதிதாக வாங்கிய கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு புதிதாக வாங்கிய ஒரு வெள்ளை துணியை எடுத்து அதன் 4 ஓரங்களிலும் மஞ்சளை தடவுங்கள்.

புதிதாக வாங்கிய நகையை அந்த துணியின் நடுவில் வைத்து அந்த துணியை நன்றாக மடித்து மண்சட்டியில் இருக்கும் உப்பின் மீது வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த மண் சட்டியில் கல் உப்பை கொட்டி நிரப்பிக்கொள்ளுங்கள். இந்த மண் சட்டியை வீட்டின் தென்மேற்கு மூலையில் அதாவது குபேர மூலையில் வைக்க வேண்டும். ஒரு சிலரின் இல்லங்களில் குபேர மூலையில் படுக்கை அறை இருக்கும். அந்த சூழ்நிலையில் அங்கு வைப்பது தவிர்த்து விட வேண்டும். பூஜையறியிலேயே வைத்துவிடலாம்.

- Advertisement -

இந்த மண் சட்டியை வைக்கும் பொழுது ஒரு சிறிய பலகை போட்டு அதில் மஞ்சள் அல்லது குங்குமத்தில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து பிறகு இந்த மண்சட்டியை அதன் மேல் வைக்க வேண்டும். அன்று ஒரு நாள் முழுவதும் அந்த இடத்திலேயே அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது அந்த மண்சட்டிக்கும் தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

பிறகு தான் அந்த நகையை அணிய வேண்டும் அதில் போட்டிருக்கும் கல்லுப்பை கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர தீப வழிபாடு

இந்த முறையில் நாம் தங்கத்தை வாங்கி வைப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தங்கமானது நிரந்தரமாக தங்கும். அதேசமயம் பல மடங்கு அதிகமாக சேரும்.

- Advertisement -