கண் திருஷ்டி பணத்தடை நீங்க பரிகாரம்

bhairavar navathaniyam
- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதங்களின் பிறப்பு எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது அதே போல தமிழ் மாதத்தின் கடைசி நாளும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். மாதத்தின் துவக்கத்தின் முதல் நாளில் நம்முடைய செல்வ வளம் பெருகவும் நம்முடைய முன்னேற்றத்திற்காகவும் சில வழிபாடுகள் பரிகாரங்களை செய்யலாம்.

அதே போல மாதத்தின் கடைசி நாளில் நம்முடைய பின்னடைவுக்கான காரணத்திற்கு பரிகாரங்களை செய்வது சிறந்ததாக அமையும். இதில் அந்த காலம் முதல் சித்தர்கள் பின்பற்றி வந்த வழக்கமாக சொல்லப்படுகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையான பணத்தடை நீக்க செய்யக் கூடிய எளிய பரிகார முறை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணத்தடை நீங்க பரிகாரம்

ஒருவருக்கு பணத்தடை பண பிரச்சனைகள் வருவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் சிலர் நன்றாக உழைத்தும் கையில் பணம் வராது அப்படி வந்தும் பணம் தாங்காது. இதற்கு முக்கியமான காரணமாக சொல்வது பிறரின் கண் திருஷ்டி தான். ஒருவரின் முன்னேற்றத்தையோ அல்லது நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையோ பொறாமை பார்வையோடு பார்த்தால் நிச்சயம் அது அவர்களை தாக்கும் என்று நம்பப்படுகிறது.

அப்படியான பிரச்சனையால் துன்பப்படும் குடும்பங்கள் ஏராளம் உண்டு அந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம். இதற்கு முதலில் ஒரு தாம்பாள தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு நவதானியத்தை எடுத்து பரப்பி விடுங்கள். அதன் மேல் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை போடுங்கள். இப்பொழுது இந்த நவதானியம் முழுதும் வரை தண்ணீர் ஊற்றுங்கள். அதிகமாக ஊற்றக் கூடாது. அதில் ஒரு வெற்றிலையை சின்ன சின்னதாக நறுக்கி போடுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீரிலே கொஞ்சமாக குங்குமத்தை சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது இது ஒரு ஆரத்தி தயாராகி விட்டது. இந்த ஆரத்தியின் மேல் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேல் கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள். இப்பொழுது வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து இடமிருந்து வலம், வலமிருந்து இடம் எட்டு முறை திருஷ்டி சுற்றுங்கள்.

அதன் பிறகு இந்த தண்ணீரை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று ஊற்றி விடுங்கள். வெளியேவே இந்த தட்டையும் சுத்தமாக அலம்பி விட்டு கை கால்களை நன்றாக சுத்தம் செய்து கொண்டு அதன் பிறகு வீட்டிற்குள் வாருங்கள். இதை வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்யலாம் அல்லது உங்கள் வீட்டில் அருகில் யாரேனும் பெரியவர்கள் இருந்தால் செய்ய சொல்லுங்கள்.

- Advertisement -

திருஷ்டி சுற்றி முடிந்த பிறகு அனைவரும் கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும் அதன் பிறகு பூஜை அறையில் வந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுங்கள். இந்த தூபம் போடும் பொழுது பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இது உங்களை பிடித்திருக்கும் கண் திருஷ்டி கெட்ட சக்திகள் தரித்திரம் அனைத்தையும் நீக்கி நல்ல ஆற்றலை தருவதோடு பணவரவையும் அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.அதுமட்டுமின்றி அன்றைய தினத்தில் ஆலயத்திற்கு சென்று பைரவரை வழிபட்டு பைரவரின் வாகனமான நாய்களுக்கு ஏதேனும் உணவு வாங்கி கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் செய்யும் குலதெய்வ பூஜை

இந்த பரிகார முறையை செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் பலவிதமான பிரச்சனைகளை சுலபமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -