கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்

kan thirustri
- Advertisement -

எவ்வளவு பெரிய பிரச்சனைகளை நாம் சமாளித்தாலும் கண் திருஷ்டியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக திகழ்கிறது. ஒரு வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கிறது என்றால் அந்த விசேஷம் நடந்து முடிந்த உடனேயே வீட்டிற்கு திருஷ்டி சுத்தி போடுவார்கள். காரணம் அந்த வீட்டிற்கு விசேஷத்திற்காக வந்த நபர்களின் பார்வை எப்படி இருக்கும் என்பது தெரியாது என்ற காரணத்தினால் தான். அப்படி திருஷ்டி சுத்தி போடாத பட்சத்தில் வீட்டிற்கு கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்றால் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை என்பது மாற்றி மாற்றி வந்து கொண்டே தான் இருக்கும். அப்படி கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்றால் அந்த கண் திருஷ்டியை போக்குவதற்கு நாம் இருக்கும் வீட்டின் திசைக்கேற்றவாறு பரிகாரங்களை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தனி ஒரு நபருக்கு மட்டும் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் அவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்றும் அந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல வழிகளையும் நாம் முயற்சி செய்வோம். இதே வீட்டிற்க்கே கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்றால் எளிமையான முறையில் பூசணிக்காய் சுற்றி உடைப்பது, தேங்காய் சுற்றி உடைப்பது, எலுமிச்சம் பழத்தை சுற்றி உடைப்பது என்ற முறைகளை கையாளுவோம். இதை தவிர்த்து இன்னும் அதிசக்தி வாய்ந்த பரிகாரமாக நாம் எந்த வீட்டில் வசிக்கிறோமோ அந்த வீட்டு திசைக்கேற்றவாறு பரிகாரங்களை செய்யும் பொழுதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

வடக்கு பார்த்த வாசல் இருக்கும் வீட்டின் கண் திருஷ்டியை நீக்க வேண்டும் என்றால் ஒரு எருமை மாட்டின் முடியையும் அதன் சாணத்தையும் சேகரித்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மடித்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்க வேண்டும். இப்படி காய வைத்து எடுத்த இந்த பொருட்களை செவ்வாய் ஹோரையில் மூன்று தெருகளும் சந்திக்கும் இடத்தில் 7 காய்ந்த மிளகாயை அதனுடன் வைத்து எரித்துவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும்.

கிழக்குப் பார்த்த வாசல் இருக்கும் வீட்டின் கண் திருஷ்டியை நீக்க ஒரு மஞ்சள் நிற துணியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி வீட்டில் வளர்க்கக்கூடிய கோழியின் ரத்தம் ஒன்று இரண்டு சொட்டுக்களையும் அதில் சேர்த்து சூரிய ஹோரையில் மூன்று தெருகளும் சந்திக்கும் இடத்தில் எரித்துவிட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.

- Advertisement -

மேற்கு பார்த்த வாசல் இருக்கும் வீட்டின் கண் திருஷ்டியை நீக்குவதற்கு 51 மிளகு 11 காய்ந்த மிளகாய் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் 21 முறை சுற்றி மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வைத்து எரித்துவிட்டு வரவேண்டும்.

தெற்கு பார்த்த வாசல் கொண்ட வீட்டின் கண் திருஷ்டியை நீக்குவதற்கு அந்த வீட்டில் வசிப்பவர்களின் பழைய துணியை கிழித்து அதில் தீபம் ஏற்றுவதற்கு உபயோகப்படுத்தும் பஞ்ச எண்ணெய் அதாவது ஐந்து எண்ணெய்கள் இருக்கிறதல்லவா? அந்த எண்ணையை அதில் ஊற்றி சூரிய அல்லது செவ்வாய் ஹோரையில் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வைத்து எரித்துவிட்டு வரவேண்டும்.

- Advertisement -

இப்படி எரித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது முடிந்த அளவிற்கு குளித்துவிட்டு வரவேண்டும். முடியாத பட்சத்தில் கை, கால், முகங்கள் அனைத்தையும் கழுவி விட்டு தான் வீட்டிற்குள் வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த முறையில் வீட்டிற்கும் வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் கண் திருஷ்டியை நீக்கி கண் திருஷ்டியால் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -