கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா? இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் நெற்றியில் வைத்துவிட்டு உறங்குங்கள். காலையில் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்.

kan thirustri
- Advertisement -

சில வக்ர எண்ணம் படைத்த மனிதர்களின் பார்வைகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டு நம்முடைய முன்னேற்றம் தடைப்படுவது தான் கண் திருஷ்டி எனப்படுகிறது. இதை நாம் கண்ணேறு என்றும் கூறுவோம். இந்த கண் திருஷ்டியை போக்குவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. மேலும் நம் முன்னோர்கள் அந்த வழிமுறைகளை முறையாக வாராவாரம் பின்பற்றி அவ்வப்போது ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டியை நீக்கிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மிகவும் எளிமையான முறையில் எப்படி கண் திருஷ்டியை விளக்குவது என்று தான் பார்க்கப் போகிறோம்.

கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் நம்முடைய முன்னேற்றத்தில் ஏதாவது தடைகள் ஏற்படும். மேலும் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி என்பதே இல்லாமல் சண்டை சச்சரவுகள் நிலையாக நிலைத்திருப்பது போல் தோன்றும். முன்னோர்கள் அவர்களின் காலத்தில் கற்பூரத்தை சுற்றி வாசலில் ஏற்றி வைப்பார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகளும் தீய சக்திகளும் வெளியேறும். இந்த கற்பூரத்தை வாரத்திற்கு ஒரு நாளாவது ஏற்றி வைப்பது அவர்களின் வழக்கமாகவே இருந்து வந்தது. கண் திருஷ்டி ஏற்பட்ட உடனே நாம் அதை நீக்கிவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பெரிதாக தெரியாது. ஆனால் நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால் பிரச்சனைகள் மிகவும் வலுவடைந்து அதை நம்மால் சரி செய்ய இயலாமல் போய்விடும். நமக்கு எப்பொழுது கண் திருஷ்டி ஏற்படும் என்று நம்மால் கணிக்க முடியாது என்பதால் இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டாலும் அதிலிருந்து நம்மால் எளிதில் வெளியே வந்து விட முடியும்.

- Advertisement -

வீட்டின் கன்னி மூலையிலோ அல்லது பூஜை அறையிலோ துளசி மாடம் கட்டி துளசி செடியை வளர்த்து வந்து அதற்கு நம் கைகளால் நீரை ஊற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு மட்டுமல்லாமல் நம் குடும்பத்திற்கும் கண் திருஷ்டி என்பது ஏற்படாது. துளசி மகாலட்சுமியின் அம்சம் என்பதால் மகாலட்சுமி தாயாரையும் வழிபட்டது போல் ஆகும் அதேநேரம் கண் திருஷ்டியையும் விளக்கம் முடியும்.

நம்முடைய வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்திருப்போம் அல்லவா? அந்த விளக்கு திரியில் இருக்கும் கருமையை சிறிதளவு மோதிர விரலால் எடுத்து நம்முடைய நடு நெற்றி பொட்டில் வைத்துவிட்டு உறங்கினோம் என்றால் நம்முடைய கண் திருஷ்டி என்பது விலகிவிடும். இதை நாம் தினமும் மேற்கொண்டால் கண் திருஷ்டி என்பதே நம்மிடம் அண்டவே அண்டாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு இல்லை என்று கஷ்டப்பட்டது போதும். இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டால் விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும்.

இந்த எளிய பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் செய்து கண் திருஷ்டியில் இருந்து நம்மையும் நம் இல்லத்தையும் காப்பாற்றுவோம்.

- Advertisement -