சொந்த வீடு இல்லை என்று கஷ்டப்பட்டது போதும். இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டால் விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும்.

kirgalakshmi
- Advertisement -

உறவுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்த காலம் போய், பணத்திற்கும் சொத்து சுகத்திற்கும் ஆடம்பரத்திற்கும் மரியாதை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. யார் ஒருவர் வசதியான வாழ்க்கையை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வருகிறது. சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கும் நபர்களை சிலர் பார்க்கும்போதே ஏளனமாக பார்த்து சிரிப்பார்கள். அதை அனுபவித்தவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். அப்படிப்பட்ட கஷ்டத்தில் இருப்பவர்கள் எந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காக்கை, குருவிகள் கூட சொந்தமாக வீடு கட்டி தான் அதில் குடித்தனம் நடத்துகின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் சொந்த வீடு அமைவதற்காக பல போராட்டங்களை செய்தாலும் அது வெற்றிகரமாக பலருக்கும் நடைபெறுவதில்லை என்பதே தான் உண்மை. வாடகை வீடு என்று போகும் பொழுது அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. அவ்வாறு வாடகை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரும் எப்படியாவது ஒரு சிறிய வீடாக இருந்தாலும் பரவாயில்லை தனக்கென்று சொந்த வீடாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கான மிகவும் எளிமையான வழிபாட்டு முறையை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வீடு என்று கூறும் பொழுதே அதற்கு அதிபதியாக திகழக் கூடியவர் கிரகலட்சுமி தான். அப்படிப்பட்ட கிரகலட்சுமியை நாம் முறையாக வழிபட்டு வந்தோம் என்றால் அவளின் அனுக்கிரகத்தால் நமக்கு விரைவிலேயே சொந்த வீடு சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.

இந்த பூஜையை நம் வீட்டு பூஜை அறையில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு கிரகலட்சுமி புகைப்படம் கண்டிப்பாக தேவைப்படும். நம்முடைய வேண்டுதல் என்ன என்பதை ஒரு சிறிய பேப்பரில் இரண்டு வரிகளுக்கு மிகாமல் எழுதிக் கொள்ள வேண்டும். சொந்த வீடு அமைய வேண்டும். இந்த இடத்தில் அமைய வேண்டும். அல்லது இப்படி அமைய வேண்டும். இன்று ஒரு பேப்பரில் எழுதி அந்த பேப்பரை கிரகலட்சுமி புகைப்படத்திற்கு பின்னால் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு கிரகலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்து அவர்களுக்கு நெய்வேத்தியம் வைக்க வேண்டும். சிறிது கற்கண்டு இருந்தால் அதை மட்டுமாவது வைக்கலாம். நெய் விளக்கு ஏற்றி வைத்து “ஓம் கிரகலட்சுமி நமஹ” என்று 108 முறை தாயாரின் புகைப்படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வருவதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும், அதே சமயம் கிரக லட்சுமியின் அருளும் கிடைத்து கூடிய விரைவிலேயே சொந்த வீடு அமையும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வ மழை பொழிய நாளை வியாழக்கிழமையோடு வந்திருக்கும் அமாவாசை நாளில் இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். என்றென்றைக்கும் வற்றாத செல்வத்தை தரும் அற்புதமான வழிபாடு.

இந்த எளிமையான வழிபாட்டை முறையாக பின்பற்றி மனதார வழி பிரகலட்சுமியை வழிபட்டு அதே சமயம் சொந்தவிட அமைவதற்கு உரிய முயற்சிகளையும் மேற்கொண்டால் விரைவிலேயே சொந்த வீடு அமைந்து அந்த வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

- Advertisement -