தீய சக்திகளை விரட்டி பணவரவை அதிகரிக்க வாராகி அன்னையின் மந்திர வழிபாடு

Varahi-amman
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் முன்னேற கொஞ்ச நஞ்ச பாடு படுவதில்லை. அப்படி பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஏதேனும் ஒரு தடங்கல் ஏற்பட்டு அப்படியே சரிவை நோக்கி சென்று கொண்டிருப்போம். இதற்கு காரணம் என்னவென்றே தெரியாமல் நாமும் குழம்பிப் போவோம். இதற்கு பிறரின் கண் திருஷ்டியும் காரணமாக இருக்கலாம் அல்லது தீய சக்தியின் செயலாகவும் இருக்கலாம்.

இது போன்ற சூழ்நிலையில் நாம் தெய்வத்தை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. இதை நம் மனது சொன்னாலும் எந்த தெய்வத்தை சரணடைவது எப்படி வழிபடுவது என்பதெல்லாம் பெரிய குழப்பமாகவே இருக்கும். இது போல வழி தெரியாமல் கலங்கி நிற்கும் சமயத்தில் வழிகாட்டும் தெய்வமாக விளங்குபவர் தான் இந்த வாராகி அன்னை. அத்தகைய அன்னையை எப்படி வழிபாடு செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீக்கி பணவரவை அதிகரிக்கும் வாராகி அன்னை மந்திரம்

இந்த வழிபாட்டை நீங்கள் பஞ்சமி திதி அன்று செய்வது சிறந்தது. ஏனெனில் வாராகி அன்னை சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னை என்று சொல்வார்கள். ஆகையால் இவர்களுக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டிலே செய்யலாம். இதை இரவு வேளையில் செய்வது மிகுந்த பலனை தரும்.

இந்த வழிபாட்டிற்கு ஐந்து எலுமிச்சைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் 5 வெற்றிலை இவை இரண்டும் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள். குங்குமம் கொஞ்சம் தாராளமாக இருக்கட்டும். இந்த வழிபாடு செய்வதற்கு வாராகி அம்மன் புகைப்படம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். படம் இல்லாத பட்சத்தில் வாராகி அம்மன் ஆகவே நினைத்து ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

முதலில் மஞ்சளை நன்றாக குழைத்து பிள்ளையார் பிடித்து வைத்து விடுங்கள். பிள்ளையாருக்கு வெற்றிலை பாக்கு பழம் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். அதே போல் வாராகி அன்னை படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி அவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் நெய்வேதியமாக வைத்து விடுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக 5 வெற்றிலையை வைத்து அதன் மேல் இந்த எலுமிச்சை பழத்தை மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

ஓம் மோஹி மோஹின்ய நமக
ஓம் அஷ்ட புஜயங்காய நமக
ஓம் பஞ்சமியை நமக

என்ற இந்த மந்திரத்தை சொல்லி அன்னைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள். அத்தனை பலன் கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாடு நீங்கள் செய்யும் போதே உங்களை சுற்றி இருக்கும் தீயவை அனைத்தும் தூள் தூளாக ஆவதுடன் தடைகள் நீக்கி பணவரவையும் அதிகரித்துக் கொடுக்கும். இந்த வழிபாடு முடிந்த பிறகு இந்த எலுமிச்சை பழத்தில் ஒன்றை எடுத்து உங்களுடைய நிலை வாசலில் கட்டி விடுங்கள். இரண்டு வாசல் இருந்தால் இரண்டு வாசலிலும் கட்டலாம்.

இதையும் படிக்கலாமே: விரைவிலேயே சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய எளிய வழிபாட்டு முறை.

இதற்கு பின் மீதம் இருக்கும் பழத்தை பழச்சாறாக அருந்துங்கள். இதை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். சக்தி வாய்ந்த வாராகி அன்னையை இந்த முறையில் வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்வில் தடைகள் நீங்கி உயரலாம். நம்பிக்கையுடன் இந்த வழிபாடு செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -