இதுவரைக்கும் நீங்க இந்த முடிச்சை கட்டலைனா , இந்த அமாவாசையை தவற விட்டராதீங்க, மறக்காம இதை செய்துடுங்க. இதுவரைக்கும் நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் காணாம போய்டும்.

- Advertisement -

நாம் உழைப்பது கஷ்டப்படுவதை எல்லாமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைவதற்காக தான். என்ன செய்தாலும் நிலைமை கொஞ்சம் கூட முன்னேறாமல் பின் தங்கியே சென்று கொண்டிருந்தால் எப்படி தான் வாழ்க்கையில் முன்னேறுவது. இதற்கு நம் கிரக நிலைகள் காரணம் ஒரு புறம் இருந்தாலும், அடுத்தவரின் கண் திருஷ்டி இதில் முக்கியமான பங்காக இருக்கும். இதனால் முன்னேற்றம் மட்டுமல்ல வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போவது, கையில் பணம் தங்காமல் செலவுகள் அதிகரித்து நிம்மதியும் இல்லாமல் இருக்கும். இதையெல்லாம் சரி செய்ய இந்த ஒரே முடிச்சை உங்கள் வீட்டு வாசலில் கட்டி விட்டால் போதும். உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து உங்களின் வாழ்க்கையில் முன்றேற்றமும் சேர்த்து கிடைக்கும். அது என்ன முடிச்சு என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

இதற்கு நம்ம தேவையான பொருள் நவதானியம். நவதானியம் என்றாலே ஒன்பது கிரகங்களுக்குரிய பொருள்கள் தானே இவர்கள் தானே நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய காரண கர்த்தாக்கள். இந்த நவதானியங்களை நாம் சரியான முறையில் கையாண்டு, சரியாக பயன்படுத்தினாலும் வாழ்க்கையில் எந்த தடையும் இல்லாமல் முன்னேறலாம். அத்துடன் இதில் சேர்க்கப்படும் இன்னும் ஒரு சில பொருட்கள் நம் வாழ்க்கையில் தடைகள், கண் திருஷ்டி அனைத்தையும் தகர்த்தெறிந்து விடும்.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு சிகப்பு துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நவதானியங்களை வைத்த பிறகு சோழி, கடுக்காய், வசம்பு இவைகளை சேர்த்து முடிச்சாக கட்டிய பிறகு இந்த முடிச்சை அமாவாசை அன்று உங்கள் வீட்டு வாசல் நிலை வாசலில் கட்டி விடுங்கள். இதில் சேர்க்கப்படும் சோழி, கடுக்காய், வசம்பு அனைத்திற்கும் அத்தனை தெய்வம் சக்திகள் இருப்பதுடன் திருஷ்டி, எதிர்மறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் அகற்றும் வல்லமையும் இந்தப் பொருள்களுக்கு உண்டு. எனவே நவதானிய தெய்வ சக்தியுடன் தீயதை அழிக்கும் இந்தப் பொருட்களையும் சேர்த்து உங்கள் நிலை வாசலில் முடிச்சாக கட்டும் போது இதை மீறி எந்த ஒரு கெடுதலும் உங்களை நெருங்கவே முடியாது.

இதை மாதம் தோறும் அம்மாவாசை அன்று மாற்றி விட வேண்டும் பழைய முடிச்சை எடுத்து ஓடும் நீரிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விட்டு புதிய முடிச்சை நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

- Advertisement -

இது மற்றவர் காலில் படாவண்ணம் பார்த்து போட்டு விடுங்கள் அது மிகவும் முக்கியம். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.

இதையும் படிக்கலாமே:

இதை மாதந்தோறும் தவறாமல் செய்து வாருங்கள் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த நவதானிய முட்டையை வாசலில் கட்டிய சில நாட்களிலே நாள்தொரு மாற்றத்தை நீங்கள் உணருவீர்கள்.

- Advertisement -