அடுத்தவர்களுடைய பொறாமையால் கண் திருஷ்டிகள் அடிக்கடி ஏற்படுகிறதா? இந்த ஒரு விஷயத்தை செஞ்சு பாருங்க, தடைகள் நீங்கி ஓஹோனு வருவீங்க!

elephant-eye-thirusti
- Advertisement -

ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட, நம்முடனேயே இருந்து கொண்டு நாம் முன்னேறுவதை பார்த்து பொறாமை, வயிற்றெரிச்சல் பிடித்து அலைபவர்கள் தான் இப்போது நம்மை சுற்றி அதிகம் இருக்கின்றனர். இதனால் தொழில் நஷ்டம், வியாபார திருப்தியின்மை, அலுவலகத்தில் பிரச்சனை, வீட்டில் குடும்ப பிரச்சனை என்று ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இதற்கு தீர்வு கட்ட இந்த ஒரு விஷயத்தை செய்யலாம்! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மலை அளவு இருக்கும் பிரச்சனையையும், பனி அளவாக மாற்றுவதற்கு உரிய சக்தி சில விஷயங்களுக்கு உண்டு. மலையளவு இருக்கும் கண் திருஷ்டிகள் கரைந்து காணாமல் போவதற்கு மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட யானையின் மிகச் சிறிய கண் நமக்கு பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. ஆன்மீகத்தில் யானையுடைய கண், திருஷ்டிகளை போக்குவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உங்கள் மீது பொறாமை பட்டு, வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் வெறுப்பினாலும், அவர்களுடைய வார்த்தைகளாலும் உண்டாகக் கூடிய பாதிப்புகளை அடியோடு களையும் அற்புத ஆற்றல் இதற்கு உண்டு.

- Advertisement -

யானையின் கண் சிறிய அளவில் இருந்தாலும் அதன் பார்வை ரொம்பவே வீரியமானதாக இருக்கும். கேமரா கண்கள் என்று சிலரை நாம் சொல்வதை கேட்டிருப்போம். அது போல ஒருமுறை பார்த்து விட்டால், அதை கேமராவில் படம் பிடித்து வைத்து விடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த யானையினுடைய கண்ணை நீங்கள் ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். அதை ஒரு பிரேம் செய்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயரும், நட்சத்திரமும் ஒரு பேப்பரில் எழுதி பின்னாடி ஒட்டி வைத்து விடுங்கள். அதுமட்டுமல்லாமல் கீழ்வரும் இந்த மந்திரத்தையும் எழுதி வையுங்கள். இதற்கு மஞ்சள், குங்குமம் தடவி அனைவரும் பார்க்கும் படியாக உங்கள் வீட்டில் வாசலில் மாட்டி வைத்து விடுங்கள். எத்தகைய கண் திருஷ்டிகள் உங்களுக்கு இருந்தாலும், அது இந்த யானையின் கண்கள் ஈர்த்துக் கொள்ளும்.

மந்திரம்:
”ஓம் கஜ முகாய நமஹ,
கஜ நேத்ராய நமஹ!”

- Advertisement -

கடை, வியாபாரம் செய்பவர்கள், தொழில் ஸ்தாபனங்கள் வைத்து தொழில் செய்பவர்கள், நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் இது போல யானையின் கண்ணை ஃபிரேம் செய்து, மந்திரத்தையும், உங்கள் பெயர், நட்சத்திரத்தையும் எழுதி வைத்து விட்டால் போதும், எத்தகைய கொடூரமான திருஷ்டிகளும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது ஓடிவிடும். அலுவலகத்திற்கு செல்பவர்கள் அல்லது வேறு சிலர் இவற்றை செய்ய முடியவில்லை என்றால் யானையின் கண்களை வெறுமனே பிரிண்ட் எடுத்து வைத்து அதன் பின்னால் பெயர், நட்சத்திரம், மந்திரம் எழுதி 4 முனைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து அதனை நான்காக மடித்து உங்கள் மணி பர்சில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை உண்மையிலேயே நல்ல எண்ணத்தோடு நெருங்குபவர்களை, இது ஒன்றும் செய்யாது ஆனால் நீங்கள் கெட்டுப் போக வேண்டும், நாசமாகப் போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது எதிர்வினையை உண்டு பண்ணி விடும். இதனால் அவர்கள் எண்ணும் தீய எண்ணங்கள் அடியோடு உங்களை நெருங்காமல் அழிந்து, ஒழிந்து விடும். எனவே கண் திருஷ்டியால் வரக்கூடிய பாதிப்புகளை உங்களை அணுகாது. இதனால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளும், தொழில் நஷ்டமும், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

- Advertisement -